கோவை, பிப்.14- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் காதலர் தினத்தை முன் னிட்டு காந்திபுரத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. நிகழ்விற்கு, வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் தினேஷ் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அர்ஜுன் மற்றும் இணையரும் இணைந்து கேக் வெட்டினர். இதில், மாணவர் சங்க மாநில செயற்குழு உறுப் பினர் கயல்விழி, மாணவர் சங் கத்தின் மாவட்ட செயலாளர் அசாருதீன் உள்ளிட்ட திரளான வாலிபர், மாணவர் சங்கத்தினர் பங் கேற்றனர். முன்னதாக, வண்ண பலூன் பறக்கவிட்டு உற்சாகமாக கொண்டாடினர்.
மாதர் சங்கம்
திருசெங்கோடு அருகே எலச்சி பாளையம் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் ஒன்றிய அலுவ லகத்தில் காதலர் தின விழா நடை பெற்றது. இதில், சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஜி.பழனியம் மாள் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் ஏ.ரஹமத், நிர் வாகிகள் கலைச்செல்வி, வசந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில், கேக் வெட்டி கொண் டாடினர். மேலும், காதல் திருமணம் செய்த தம்பதியர்களுக்கு வண்ண,வண்ண மலர்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
சுற்றுலா தலங்களில் உற்சாகம்
சுற்றுலா தளங்களில் காதல் தம்பதினர் உற்சாகமாக காதலர் தினத்தை கொண்டாடினர். ஒவ் வொரு ஆண்டும் பிப்.14 ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் காதலர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகை யில் ரோஜா மலர்கள், மலர் செடி கள், நவநாகரிக உடைகள், அணி கலன்கள் ஆகியவற்றை பரிசு பொருட்களாக கொடுத்து அன்பை பரிமாறிக்கொள்வது வழக்கம். அந்த வகையில், செவ்வாயன்று காதலர் தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் பூங்காக்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம் சங்கள் உள்ள இடங்களுக்கு ஏராள மான காதல் ஜோடியினர் குவிந் தனர். அவர்கள் அங்கு காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்து தங்களது அன்பை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொண்டனர். சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த காதல் ஜோடி கள் சேலம், ஏற்காடு, மேட்டூர் பகுதி பூங்காக்களில் குவிந்தனர். காதலித்து திருமணம் செய்த தம்பதிகள் பூங்காக்களுக்கு வந்து மலரும் நினைவுகளை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டனர். ஏற் காட்டில் படகுத்துறை,
அண்ணா பூங்கா, லேடீஸ் சீட், ரோஜா கார்டன், சேர்வராயன் மலைக் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் காதல் ஜோடியினர் உலா வந்து காதலர் தினத்தை கொண்டாடினர். ஏரியில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர். சேலம் - குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவிற்கும், மாந கரில் உள்ள கோவிலுக்கு சென் றனர். மேட்டூர் பூங்காவுக்கு காத லர்கள் ஜோடி, ஜோடியாக திங்க ளன்று காலை முதலே வந்த வண்ணம் இருந்தனர். பூங்காக் களில் அத்துமீறிய காதலர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் சார்பில், காதலர் தினம் ஆனைமலையில் கொண்டாடப் பட்டது. இந்நிகழ்விற்கு சங்கத்தின் தாலுகா செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். இதில், மாவட்ட பொருளாளர் தினேஷ் ராஜா உட்பட பலர் கலந்து கொண் டனர். இதேபோல், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதில், சாதி மறுப்பு திருமணம் காதல் திருமணம் புரிந்த 64 தம்பதிகள் கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வில், மாதர் சங் கத்தின் மாவட்ட தலைவர் ஜோதி மணி, செயலாளர் டி.சுதா பொரு ளாளர் உஷா, மாநில குழு உறுப் பினர் ராஜலட்சுமி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சாமுண்டீஸ்வரி, தங்கமணி, வனஜா, ஜீவாமணி, அமுதா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.