districts

img

தமிழகத்தில்தான் தொழில்களுக்கு பாதுகாப்பு உள்ளது

கோவை, ஆக. 7- தமிழ்நாட்டில், பஞ்சாலை தொழி லுக்கு தமிழக அரசு நிறைய உதவிகள் செய்து கொண்டு இருக்கின்றது. மத் திய பிரதேசத்தை விட தமிழகத்தில்தான் தொழில்களுக்கு பாதுகாப்பு அதிகம் என இந்திய பருத்திக் கூட்டமைப்பு தலைவர் துளசிதரன் செய்திளார்க ளிடம் தெரிவித்தார். கோவை, பந்தய சாலைப் பகுதியில் உள்ள சைமா அலுவலகத்தில் இந்திய பருத்தி கூட்டமைப்புத் தலைவர் துளசிதரன் புதனன்று செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது அவர் கூறு கையில், இந்திய பருத்திக் கூட்டமைப்பு சார்பில் அகில இந்திய அளவில் கருத் தரங்கம் 9 மற்றும் 10 ஆகிய இரு தேதிகளில் கோவையில் நடத்தப்பட இருக்கின்றது. இதில், பல நாடு களை சேர்ந்த தொழில் துறையினர் பங்கேற்க உள்ளனர். அந்த கருத்தரங்க ளில் பல்வேறு நாடுகளில் இருக்கும் பருத்தி தொடர்பான விவகாரங்கள் குறித்து விவாதிக்க இருக்கின்றோம். இதில், பங்கேற்பவர்கள், பருத்தி தொடர்பான உலகளாவிய அறிவுகளு டன் திரும்பி செல்ல முடியும், இது இந் திய பருத்திக் கூட்டமைப்பின் ஆறாவது கருத்தரங்கம் என்றார்.  மேலும், அவர் கூறுகையில், இந் திய பருத்தி விலை தற்போது அதிகமாக வும், மற்ற நாடுகளில் பருத்தி விலை குறைவானதாகவும் இருக்கிறது. இத னால், ஜவுளித்துறை பெரிது பாதிக்கப் பட்டு இருக்கின்றது. மத்திய அரசு இதை கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும். இந்தியாவில், தற்போது பருத்தி உற் பத்தி குறைவு என்பதால், ஒரு பருத்தி கண்டி ரூ. 57 ஆயிரம் விலை ஆதிகமாக இருக்கின்றது. பருத்தி விலை இன்னும் அதிகரிக்கும் என்பதால் கையிருப்பு பருத்தியை விற்பனையாளர்கள் விற் காமல் வைத்திருக்கின்றனர். இதனால், பஞ்சாலை தொழில் பாதிக்கப்படுகிறது. பங்களா தேச நாட்டில் அரசியல் குழுப்பமான சூழல் நிலவுவதால் திருப்பூருக்கு ஏற்றுமதி வாய்ப்பு அதி கம் இருக்கிறது. தமிழகத்தில் பஞ் சாலைத் தொழிலுக்கு தமிழக அரசு நிறைய உதவிகள் செய்து கொண்டுள் ளார்கள்.  பருத்திக்கு இறக்குமதிக்கு 11 சத வீதம் வரி விதிக்கின்றனர். பருத்தி விளைச்சல் அதிகரிக்க ஒன்றிய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் போதுமான தான இல்லை. இந்தியாவில் 49 மாவட்டங்களில் பருத்தி விளைகின் றது. அந்த மாவட்டங்களில் அரசு கவ னம் செலுத்த வேண்டும். பருத்தி விளையும் 49 மாவட்டங்களில் கவனம் செலுத்தினால், நாட்டில் பருத்தி உற் பத்தி 50 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கின்றது. உணவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பருத்திக்கும் அரசு கொடுக்க வேண்டும். மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு சில சலுகைகள் கொடுப்பதால் தமிழகத்தில் இருந்து சில தனியார் நிறுவனங்கள் செல்வ தாக கூறப்படுகிறது. ஆனால், தமிழகத் தில் இருக்கும் கலாச்சாரம், பாதுகாப்பு போன்றவை மத்திய பிரதேச மாநி லத்தில் இருக்காது என்றார்.