districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

விண்வெளி ஆராய்ச்சித்துறையில் இந்தியாவுக்கு நன்மதிப்பு

இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பேச்சு

கோவை, பிப்.22- விண்வெளி ஆராய்ச்சித்தறையில் இந்தியாவிற்கு நன் மதிப்பு இருப்பதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பொள்ளாச்சியில் தனியார் கல்லூரி மாணவர்களிடையே உரையாற்றுகையில் தெரிவித்தார். இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சிவன் பொள்ளாச்சியி லுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், மாண வர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய, பயத்தை  போக்கி எந்த ஒரு செயலிலும், அதிக கவனம், தீவிர முயற்சி  எடுக்க வேண்டும். அந்த செயலை வித்தியாசப்படுத்தி காட்ட  வேண்டும். மாணவர்கள் அறிவை பயன்படுத்தி புதிய கண்டு பிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும். குறைந்த மதிப்பெண்  பெற்றிருந்தாலும் உங்களுக்கான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது. விண்வெளி ஆராய்ச்சி துறையில் நல்ல  வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா இருக்கிறது. மற்ற நாடு களிடமும் விண்வெளி ஆராய்ச்சித்துறையில் இந்தியா வுக்கு நன்மதிப்பு உள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு தயாரிப்பையும் நம் நாட்டிலேயே உருவாக்கினால் அதிக  பயன் உள்ளது. உதாரணமாக செயற்கைக்கோள் வாயிலாக  படங்கள் பிடிக்க, இத்தாலி நாட்டுடன் ஒப்பந்தம் செய்ய முற்பட்டபோது, நிபந்தனை விதிக்கப்பட்டது. அதில் மூன்று  செயற்கைக்கோள்கள் வாயிலாக ஒரு ஆண்டுக்கு படம் பிடிக்க, ரூ.15 ஆயிரம் கோடி வீதம் மூன்று ஆண்டுக்கு ரூ.45  ஆயிரம் கோடி ரூபாய் கோரப்பட்டது. அப்போது, ஒன்றிய அரசின் அனுமதி பெற்று ரூ.200  கோடியில் ஒரு செயற்கைக்கோள் வீதம் ரூ.600 கோடியில்  மூன்று செயற்கைக்கோள்கள் தயாரிக்கப்பட்டு படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது இஸ்ரோவின் சாதனை. படித்து முடித்து வேலை தேடுவதை விட சுயமாக தொழில்  நிறுவனங்களை உருவாக்க முயற்சிக்க வேண்டும். ஆராய்ச்சி யில் ஈடுபடும் மாணவர்களுக்காக அரசு பல்வேறு திட்டங் களை வைத்துள்ளது. மற்ற நாடுகளை விட இத்துறையில் இந்தியா முன்னணியில் உள்ளது, என்றார்.

பள்ளிகளுக்கு விடைத்தாள்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாமக்கல், பிப்.22- நாமக்கல் மாவட்டத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விடைத்தாள்கள் அனுப்பும்  பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13  ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 3 ஆம் தேதி நிறைவடைகிறது. 11  ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி,  ஏப்ரல் 5 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த தேர்வுக்கான  விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு பிறகு மதிப்பெண் பட்டியலிடும் தனித்தாள்கள் விளக்க கையேடு ஆகியவை அந்தந்த மாவட்ட பள்ளி கல்வித்துறைக்கு அரசு தேர்வுகள்  துறை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  நாமக்கல் மாவட்ட அரசு தேர்வுகள் துறை உதவி இயக் ்குநர் சிவகாமி தலைமையில், அத்துறையைச் சார்ந்த ஊழியர்கள் விடைத்தாள்களை பள்ளி நிர்வாகத்தினரிடம் வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். வரும் வெள்ளியன்று (நாளை) வரை இப்பணி நடைபெறும் என்றும்,  அடுத்தகட்டமாக 10 ஆம் வகுப்புக்கான விடைத்தாள்கள் வழங்கும் பணி தொடங்கப்படும் எனவும் அரசு தேர்வு துறை  அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாலையில் விரல்களை இழந்த சிறுமி மார்க்சிஸ்ட் கட்சி முன்முயற்சியால் வழக்குப் பதிவு

ஈரோடு, பிப்.22- பஞ்சாலையில் வேலை செய்து கொண் டிருந்த நேரத்தில், விபத்தில் சிறுமியின் கை  விரல்கள் துண்டாகின. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க சென்றபோது புகாரை ஏற்க மறுத்த நிலையில், மார்க் சிஸ்ட் கட்சி தலையீடு செய்து வழக்குப்பதிவு  செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்,  ஆலங்குடி தாலுகா, அம்மையன்புரத்தைச் சேர்ந்த ரெங்கசாமி மகள் ராஜேஸ்வரி (19). ஈரோடு,  மொடக்குறிச்சி வட்டம், தாண்டாம்பா ளையத்திலுள்ளது செல்வக்குமார் ஸ்பின் ்னர்ஸ் பி.லிட் என்ற பஞ்சாலையில், ராஜேஸ் வரி உள்ளிட்ட 5 சிறுமிகள் கடந்த 2017ஆம் ஆண்டு வேலைக்கு சேர்க்கப்பட்டனர். ஆலை வளாகத்திலேயே விடுதி அமைத்து தங்க வைக்கப்பட்டு வேலை வாங்கப்பட்டு வந்தனர்.  

இந்நிலையில், கடந்த மாதம் 31ஆம் தேதி யன்று இரவு நேர பணிக்கு அழைக்கப்பட்ட ராஜேஸ்வரி புளூரூம் வேலையையும் சேர்த்து செய்ய வேண்டும் என நிர்பந்திக் கப்பட்டார். இந்த, பழுதடைந்த இயந்தி ரத்தில் ராஜேஷ்வரியின் கை உள்ளிழுக் கப்பட்டு நசுங்கியது. இதனையடுத்து, ஈரோடு  தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி  வைக்கப்பட்டு அங்கு நான்கு விரல்கள் அகற் றப்பட்டது. இதுகுறித்து எந்த வழக்கும் தொடுக்க வேண்டாம், புகார் செய்ய வேண்டாம், அனைத்து உதவி, தேவைகளை செய் கிறேன் என ஆலை உரிமையாளர் கேட்டுக்  கொண்டதால், காவல்துறைக்கு எந்த தக வலும் கொடுக்கவில்லை. ஆனால் அவர்  அளித்த வாக்குறுதிப்படி எந்த உதவியும் செய்யவில்லை. எனவே, கடன் வாங்கி மருத்துவ செலவுகளை செலுத்தி டிஸ் சார்ஜ் ஆனவர் காவல் நிலையம் சென்றார்.  ஆனால், காவல் துறையினர் வழக்கு பதிவு  செய்யவில்லை. பின்னர், அலைக்கழிக் கப்பட்ட சிறுமி மற்றும் அவரது உறவி னர்கள் மார்க்சிஸ்ட் கட்சியிடம் முறையிட் டனர். இதனையடுத்து, மார்க்சிஸ்ட் கட்சி  தலையீடு செய்த பிறகு சிவகிரி காவல் நிலை யத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.   ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் இதுபோன்று சிறுமிகளை அடைத்து வைத்து  வேலை வாங்கப்படுவதும், விபத்து, மரணம்  ஏற்பட்டால் அதனை மூடி மறைப்பதும் தொடர்  நிகழ்வாக இருக்கிறது. மாவட்ட நிர்வாகம், தொழிலாளர் நலத்துறை இதுபோன்ற நிறு வனங்களை கண்காணித்து உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை  எழுந்துள்ளது. 

மகனை தேடிக் கண்டுபிடிக்க  பிஏபி தண்ணீரை நிறுத்த கோரிக்கை

திருப்பூர், பிப்.22 -  திருப்பூர் ஆண்டிபாளையம் வாய்க்காலில் விழுந்து காணாமல் போன மகனை தேடிக் கண்டுபிடிக்க பிஏபி வாய்க் கால் தண்ணீரை நிறுத்துமாறு அவரது தாயார் மாவட்ட ஆட் சியரிடம் மனு அளித்தார். திருப்பூர், நல்லூர் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா. இவரது  மகன் சஞ்சய் (19), திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூ ரியில் பிகாம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில்  கடந்த 19 ஆம் தேதி நண்பர்களுடன் திருப்பூர் - தாராபுரம் சாலை,  ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள வாய்க்காலில் குளிப்ப தற்காக சென்றார். வாய்க்காலில் நண்பர்களுடன் குளித்த போது திடீரென சஞ்சய் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும்,  மேலும் நண்பர்கள் சஞ்சையை காப்பாற்ற முயற்சி செய்ததா கவும், ஆனால் நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்க ளால் சஞ்சையை மீட்க முடியவில்லை என்றும் தெரிவித்த னர். இதுகுறித்து அவிநாசிபாளையம் போலீசாருக்கு தகவல்  தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீய ணைப்பு துறை உதவியுடன் நீரில் அடித்து செல்லப்பட்ட சஞ் சயை தேடினர். ஆனால் வாய்க்காலில் அதிக அளவில் நீர்  செல்வதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்த நிலை யில் சஞ்சயின் தாயார் சங்கீதா மற்றும் அவர்களது உறவி னர்கள் செவ்வாயன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரை சந் தித்து மனு அளித்தனர். அதில் வாய்க்காலில் விழுந்து காணாமல் போன தனது  மகனின் உடலை கண்டுபிடித்து தரக் கோரியும், அதற்காக  ஆண்டிபாளையம் வாய்க்காலுக்கு வரும் நீரை நிறுத்தியோ  அல்லது வேறு பகுதிக்கு மாற்றியோ விட வேண்டும் என  கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

திருப்பூர், பிப். 22 – திருப்பூர் மாவட்ட எரி வாயு நுகர்வோர் குறை தீர்க் கும் நாள் கூட்டம் பிப்ரவரி 28  (செவ்வாயன்று) பிற்பகல் 3  மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கம் அறை எண் 20இல்  மாவட்ட வருவாய் அலுவலர்  த.ப.ஜெய்பீம் தலைமையில்  நடைபெறும் என மாவட்ட நிர் வாகத்தின் செய்திக்குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணைகளின் நிலவரம் 

திருமூர்த்தி அணை நீர்மட்டம்:44.79/60அடி நீர்வரத்து:833கன அடி வெளியேற்றம்:458கனஅடி

அமராவதி அணை நீர்மட்டம்:63.49/90அடி.நீர்வரத்து:47கனஅடி வெளியேற்றம்:266கனஅடி

டெண்டர் விடப்பட்டதில் முறைகேடு? ஆணையர் மீது புகார்

உதகை, பிப்.22- நெல்லியாளம் நகராட்சி ஆணை யர், வளர்ச்சி பணிகள் ஏலத்தில் பார பட்சமாக நடப்பாக ஒப்பந்ததாரர் மாவட்ட லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு போலீசாரிடம் புகார் அளிக்கப் பட்டது. மேலும், இதுகுறித்து நெல்லி யாளம் நகராட்சி கவுன்சிலர்கள்  மாவட்ட ஆட்சியருக்கு புகார் அனுப்பி யுள்ளனர். அம்மனுவில் கூறியுள்ளதாவது,  நெல்லியாளம் நகராட்சியில் திட்டப் பணிக்கான பொது நிதிக்கான டெண் டரில் பங்கேற்றேன். கோமுமூலை எஸ்சி காலனியில் உள்ள வார்டு 18ல்  பேவர் பிளாக் சாலை பணிக்கான ஏலத்தில் மதிப்பீட்டை விட 25 சதவிகி தம் குறைவு மதிப்பீட்டை, நெல்லியா ளம் நகரமன்றம் டெண்டரை ஏற்றுக் கொண்டது. ஆனால், நகராட்சி ஆணை யர் முன்கூட்டியே 3சதவிகிதம் கமி சனை லஞ்சமாக கோருகிறார். இதன் காரணமாக டெண்டரில் இரண்டா வது விலைக்குக் குறைவான விகி தத்தைக் குறிப்பிட்ட அடுத்த ஏலதார ருக்கு அதே வேலையை அவர் வழங் குகிறார். நெல்லியாளம் நகராட்சி யில் இதுபோன்ற டெண்டர் முறை கேடுகள் நடந்து வருகின்றன. எனவே, இந்த முழு டெண்டரையும் ரத்து  செய்துவிட்டு, விரைவில் புதிய டெண் டரை அறிவிக்கவும், இந்த முறை கேடு குறித்து நெல்லியாளம் நக ராட்சி ஆணையர் மீது விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், இதுகுறித்து  மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித்திடம் கேட்டபோது, ‘நெல்லியாளம் நக ராட்சி ஆணையர் மீது டெண்டர், பணி யாளர்களுக்கான பி.எப்., பிடித்தம் உட்பட் முறைகேடுகள் குறித்து கவுன் சிலர்கள் மற்றும் ஒப்பந்ததார்கள் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை விசாரிக்க மண்டல நகராட்சி நிர்வாக  ஆணையருக்கு அனுப்பியுள்ளேன்’ என்றார்.

மின்தடை

தருமபுரி, பிப்.22- பென்னாகரம் துணை மின்  நிலையத்தில் வியாழனன்று (இன்று) மாதாந்திர பராம ரிப்பு பணி நடைபெற உள் ளது. இதன் காரணமாக பென் னாகரம், ஒகேனக்கல், ஏரி யூர், பாப்பாரப்பட்டி, கொல் லப்பட்டி, தோமனஅள்ளி, திகி லோடு, அதகபாடி, ஆலமரத் துப்பட்டி உள்ளிட்ட பகுதி களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநி யோகம் நிறுத்தப்படுகிறது.