தாராபுரம், செப் - 6 தாராபுரம் வட்டார பகுதிக ளில் பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளதால் நகராட்சி நிர்வாகம் உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாராபுரம் வட்டாரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு தற் போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அரசு ஆணை வெளியிட்ட சில மாதங்கள் மட்டும் கட் டுக்குள் இருந்து வந்த பிளாஸ்டிக் பயன்பாடு பழைய நிலையில் தொடர்ந்து வருகிறது. தற்போது மளிகைகடைகள், உணவகங்கள், பேக்கரிகள் இறைச்சிகடைகள், துணிக்கடை கள் மற்றும் டாஸ்மாக் பார்கள் என அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் தாராளமாக புழங்கி வருகிறது. இதன் காரணமாக சுற்றுச்சூழல் மாசு பாடு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சாலையோ ரங்களில் மது அருந்தும் குடிமகன்கள் பிளாஸ்டிக் டம்ளர்களை அப்படியே போட்டு செல்கின்றனர். இதை உண்ணும் கால்நடை கள் பாதிப்பிற்குள்ளாகின்றன. பேக்கரி மற் றும் உணவங்களில் சூடான உணவுப்பொருட் களை பிளாஸ்டிக் பைகளில் ஊற்றி தருகின் றனர். இதனால் மனிதர்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து கண்கா ணித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய அதி காரிகள் பெயரளவிற்கு மாதத்தில் ஒரு சில கடைகளில் மட்டும் ஆய்வு மேற்கொண்டு நட வடிக்கை எடுக்கின்றனர். இதனால் பிளாஸ் டிக் பொருட்கள் தங்கு தடையின்றி பயன்ப டுத்தப்பட்டு வருகிறது. எனவே நகராட்சி நிர் வாகம் தொடர் நடவடிக்கைகள் மேற் கொண்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றி லும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.