districts

img

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கோவை, ஜூலை 16- பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அதிக ரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய  நீதி கிடைக்கும் வகையில் தலையீடு செலுத்த வேண்டு மென மாதர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரி டம் கோரிக்கை மனு அளித்தனர்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், செவ் வாயன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள  மனுவில் கூறியுள்ளதாவது, கடந்த ஒரு வருடத்தில், ஆலாந்துறை அரசு பள்ளி மற்றும் சின்மயா பள்ளியில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்ப வங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டெல்லி பப்ளிக்  ஸ்கூலில் மாணவிக்கு நூலகரால் பாலியல் துன்புறுத் தல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. பெரும்பாலான மாணவிகள் தங்கள் குடும் பத்தினர் மற்றும் ஆசிரியர்களிடம் பயந்து புகார் செய்ய  தயங்குகின்றனர். புகார் செய்தாலும், பள்ளி நிர்வாகம்  குற்றவாளிகளை பாதுகாக்க முயற்சியை மேற்கொள் ளப்படுகிறது. போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதி கரித்து வருகின்றன. அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளிலும் உள் புகார் கமிட்டிகளை (ICC) அமைக்க வேண்டும். உள் புகார்  கமிட்டிகளை ஒருங்கிணைக்க ஒரு மாவட்ட அளவிலான புகார் கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என  மனுவில் தெரிவித்துள்ளனர். 

முன்னதாக ஆட்சியரிடம் மனு அளிக்கையில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட் டச் செயலாளர் சுதா, மாவட்டத் தலைவர் ஜோதிமணி,  பொருளாளர் உஷா, மாநில குழு உறுப்பினர் ராஜலட் சுமி மற்றும் நிர்வாகிகள் ஜீவாமணி, மஹபூ நிஷா, அமுதா, ரேவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கோவையில் புத்தகத் திருவிழா 

கோவை, ஜூலை 16- கோவையில், ஜூலை 19 ஆம் தேதியன்று முதல் 28  ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளதாக  மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடிசியா நிர் வாகம் இணைந்து 8 ஆவது ஆண்டாக நடத்துகின்ற கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா ஜூலை 19 ஆம் தேதி யன்று முதல் 28 ஆம் தேதி வரை கொடிசியா தொழிற் காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளது. இப்புத்த கத் திருவிழாவில் தமிழ்நாடு, புதுச்சேரி மட்டுமல்லா மல் பல்வேறு மாநிலங்களில் இருந்து புத்தக பதிப்பா ளர்கள் பங்கேற்க உள்ளனர். இதில், 280க்கும் மேற்பட்ட  அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து, செய்தியாளர்களை சந்தித்த கோவை  மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, ஆண்டுதோறும் இந்த புத்தக திருவிழா வெற்றிகரமாக நடத்தப்பட்டு வரு கிறது. அதே போல் இந்த ஆண்டும் பல்வேறு நிகழ்ச் சிகள், விருதுகள், போட்டிகள் நடத்த திட்டமிட்டுள் ளோம். மாவட்ட நூலகத் துறை மற்றும் கொடிசியா நிர்வா கம் இணைந்து புத்தக திருவிழாவை நடத்த உள்ளது. கடந்த ஆண்டு 2 கோடி அளவிற்கு விற்பனை நடைபெற் றது. அதே போன்று இந்த ஆண்டும் எதிர்பார்க்கி றோம். கடந்த முறை புத்தக நன்கொடை மூலம் 2000 புத் தகங்கள் சிறைவாசிகளுக்காக அளிக்கப்பட்டது. அதே  போன்று இந்த ஆண்டும் இதனை தொடர உள்ளோம். 285 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. பல்வேறு மாநி லங்களில் இருந்து பதிப்பாளர்கள் வருகை தர உள்ள னர். 

குறிப்பாக, இம்முறை மாணவர்களுக்கு பல்வேறு இலக்கிய போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளது. மேலும்,  வருகின்ற 19 ஆம் தேதியன்று முதல் 28 ஆம் தேதி வரை  எந்த நாட்களிலும் விடுமுறை இல்லாமல் தொடர்ந்து  இப்புத்தகத் திருவிழா நடைபெறும் என்பதால் பொதுமக் கள் அனைவரும் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்  கொண்டார்.

வாலிபர் சங்க ரத்ததான முகாம்

கோவை, ஜூலை 16- கள்ளச்சாராயத்திற்கு எதிரான போராட்டத்தில் உயிர் நீத்த கடலூர் குமார் மற்றும் ஆனந்த் நினைவாக  ரத்ததான முகாம்  நடைபெற்றது.

கள்ளச்சாராயத்திற்கு எதிரான போராட்டத்தில் உயிர் நீத்த கடலூர் குமார் மற்றும் ஆனந்த் ஆகியோ ரின் நினைவாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் கோவை மாவட்டம், எஸ்.எஸ்.குளம் மேற்கு  ஒன்றிய கமிட்டி மற்றும் கோவை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி சார்பில் உடையாம்பாளையம் அரசு பள்ளியில் ஞாயிறன்று இரத்ததான முகாம்  நடை பெற்றது. இதில், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் வி. ராமமூர்த்தி, என்.சுமதி, இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் தினேஷ் ராஜா, மாவட்ட துணைச் செயலாளர்  ந.ராஜா, மாவட்டக் குழு  உறுப்பினர் என். கீதாஞ்சலி, வாலிபர் சங்கத்தின்  முன்னாள் நிர்வாகிகள் பாலமுரளி, துரைசங்கர் மற்றும்  ஒன்றிய கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று ரத்த தானம் வழங்கினர். மொத்தம் 44 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு வழங் கப்பட்டது.

உயர்த்தப்பட்ட மின் கட்டணத்திலிருந்து விலக்கு

 விசைத்தறியாளர்கள் கோரிக்கை

ஈரோடு, ஜூலை 16-
உயர்த்தப்பட்ட மின் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென விசைத்தறியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

இதுகுறித்து விசைத்தறி கூட்டமைப் பினர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது, கடந்த வருடம் ஜூலை மாதம்  மின் கட்டண உயர்வில் எங்களது விசைத்த றிக்கான மின் இணைப்புகளுக்கு ஒழுங்கு முறை ஆணையம் அறிவிப்பின்படி  யூனிட்டுக்கு 10 பைசா உயர்த்தப்பட்டது. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க கோரிக்கை வைத்திருந்தோம்.

தற்போது ஒழுங்குமுறை ஆணையம் சார்பாக விசைத்தறிக்கான மின் கட்டணம்  யூனிட்டுக்கு 35 பைசா உயர்த்தப்பட்டுள்ளது எங்களுக்கு மிகுந்த பாதிப்பை உண்டாக்கி யுள்ளது. 

கடந்த 2022ஆம் ஆண்டு 1000 முதல் 1500  யூனிட் வரை விசைத்தறிக்கான மின் கட்ட ணம் மானியத் தொகை போக 4.15 பைசாவாக வும், கடந்தாண்டு பத்து பைசா உயர்த்தப் பட்டு 4.25 பைசாவாகவும் நிர்ணயம் செய்யப் பட்டது. ஆனால் தற்போது 35 பைசா உயர்த் தப்பட்டு 4.60 பைசாவாக உள்ளது.

மேலும் 1501 யூனிட்டுக்கு மேல், கடந்த  2022ஆம் ஆண்டு 5.30 என்றிருந்த மின்சார  கட்டணம் கடந்த ஆண்டு 5.40 பைசாவாக உயர்த்தப்பட்டு, தற்போது 5.75 பைசாவாக மானிய தொகை போக நிர்ணயம் செய்யப்பட் டுள்ளது.

உற்பத்தி செய்யப்பட்ட துணியை நூல்  கொள்முதல் விலை விட குறைந்த விலைக்கு  துணிகள் விற்பனையாகும் சூழலும், நெசவா ளருக்கு குறைந்த நெசவுக்கூலி பெரும் கார ணத்தினாலும், பெரும்பாலான விசைத்தறி நெசவாளர்கள் தொழில் செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும் தங்களை நம்பி யுள்ள தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு  கொடுக்க முடியாத காரணத்தாலும், விசைத் தறி தொழில் எங்கள் கையை விட்டு சென்றுவி டும். இச்சூழ்நிலையில் தற்போதைய விசைத் தறிக்கான உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை,  தமிழக முதல்வர் பரிசீலனை செய்து விலக்கு  அளிக்குமாறு தமிழ்நாடு விசைத்தறி சங்கங்க ளின் கூட்டமைப்பின் சார்பில் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

வாய்க்கால் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

கோபி, ஜூலை 16- கோபி அருகே வாய்க்கால் பகுதியில் ஆக் கிரமிப்பு அகற்றம் பணி நடைபெற்று வருகி றது. 10 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறு வதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள  கீழ்பவானி பாசனத்திட்டம் கூகலூர் பிரிவு  வாய்க்காலில், சக்கரபாளையம் உபகிலை  வாய்க்கால், கடைமடை பகுதி வாய்க்கால்  ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடைபெற்று  வருகிறது. இதில் நீர்வள ஆதாரத்துறை, காவல் துறை, வருவாய்த்துறை, மின் துறை,  பாசன சபை ஆகியோர் இணைந்து ஆக்கிர மிப்பு அகற்றிம் பணியில் ஈடுபட்டுள்ளனர். 10 ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அனைத்து துறைக ளும் ஒருங்கிணைந்து ஆக்கிரமிப்புகள் அகற் றப்பட்டு வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.