districts

img

பால் கொள்முதல் விலையை உயர்த்திடுக

தருமபுரி, மார்ச் 28- பால் கொள்முதல் விலையை  உயரத்தக்கோரி பாப்பிரெட்டிப் பட்டி வட்டம் மெனசி கூட்டுறவு பால்  சங்கம் முன்பு தமிழ்நாடு பால்  உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு  ரூ 42ம், எருமை மாட்டுபால் லிட்டர்  ஒன்றுக்கு ரூ 52 வழங்கவேண்டும். பால் உற்பத்தியாளர் மற்றும் பால் உற்பத்தியாளர் சங்கங்களை, பாதுகாக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். பால் உற்பத்தியாளர் களுக்கு 50 சதவீத மானிய விலை யில் தீவனம் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.  ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட குழு உறுப்பினர்  பொ. பொன்னு சாமி தலைமை ஏற்றார். மாநில துணைத்தலைவர் எஸ்.தீர்த்தகிரி, விவசாயிகள் சங்க மாவட்ட பொரு ளாளர் சி.வஞ்சி, மெனசி பால் உற் பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர்  மா.தனபால்,  மாவட்டக்  குழு உறுப்பினர்கள் மனோகரன்,  மாதையன்  சேகர், பழனி, வீரமணி  உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இதேபோன்று அரூர் வட்டம்,  கே.வேட்டரப்பட்டியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு புத்தன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க  ஒன்றிய செயலாளர் ஏ.நேரு, தமிழ் நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க   மாவட்ட நிர்வாகி,சுப்பிரமணி, முன்னாள் கரும்பு சங்க செயலாளர்   பி.குமார் ஆகியோர் உரையாற் றினர். தருமபுரி ஒன்றியம் செம் மாண்ட குப்பத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட துணைத்தலைவர் என்.கந்தசாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாவட்ட செயலாளர் சோ. அருச்சுணன், அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் ஒன்றிய  செயலாளர்  எம்.மீனாட்சி, பால்  சங்க நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், காளியண்ணண் கிருஷ்ணன் ஆகி யோர் பேசினர்.