அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது வரம்பை 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தி இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்காதே என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி பகுதி ஒன்றியக்குழு ஒன்றிய செயலாளர் வி.தீனதயாளன் தலைமை ஏற்று கண்டன உரையாற்றினார். போராட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், திருவீழிமிழலை கிளை தலைவர் இ.ஹரிப்பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.