districts

img

சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு

உதகை, பிப்.12- சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி  உயர்வு வழங்கப்படும் என பந்தலூரில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் வியாபாரிகள் சங்கத்தினர் உறுதியளித்தனர். நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள  பந்தலூரில் ஏராளமான சுமைதூக்கும் தொழி லாளர்கள் உள்ளனர். இவர்கள், மார்க்கெட் டிற்கு வரும் காய்கறி மூட்டை ஏற்றி, இறக்கி  அதில் வரும் வருமானம் மூலம் குடும்பத்தை  நடத்தி வருகின்றனர். ஆனால், கடந்த 10  ஆண்டுகளுக்கு மேலாக கூலி உயர்வு இத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.  இந்நிலையில், சுமைதூக்கும் தொழிலாளர்க ளின் கூலி உயர்வு தொடர்பான பேச்சு வார்த்தை கூட்டம் பந்தலூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிஐடியு சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத் தலைவர்கள் மற்றும் பந்தலூர் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் கூறிய கூலி  உயர்வானது வழங்கப்படும் என்று உத்தர வாதம் அளிக்கப்பட்டது. முன்னதாக, இந்த பேச்சுவார்த்தையில் சிஐடியு சுமைதூக்கும் தொழிலாளர் சங்க  மாவட்டச் செயலாளர் ராஜன், சிஐடியு மாவட் டக்குழு உறுப்பினர்கள் ரமேஷ், சம்சு, சுமை தூக்கும் தொழிலாளர் சங்க பந்தலூர் தலை வர் சக்திவேல், பொருளாளர் வீரக்குமார், துணைச்செயலாளர் சரண்ராஜ் மற்றும் வியா பாரிகள் சங்கத் தலைவர் அஷ்ரப், செயலா ளர் ஆண்டனி, பொருளாளர் காளிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.