districts

img

ஜல்லி கற்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்

கோவை, டிச.16- எம் சான்ட், பி சான்ட் மற்றும் ஜல்லி கற்கள் விலை உயர் வால் கட்டுமானத் தொழில் பாதிப்பட்டுள்ளதால் அரசு தலை யிட்டு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என கட்டு மானப் பொறியாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து கோவை மாவட்டம், பொள்ளாச்சி சார் ஆட்சி யர் அலுவலகத்தில் கட்டுமானப் பொறியாளர்கள் சங்கத்தி னர் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதில் கூறப்பட்டுள்ள தாவது, கல்குவாரி கிரசர் உரிமையாளர்கள் அவர்களது கூட் டத்தில் டிச.1 முதல் எம் சாண்ட், பி சாண்ட் மற்றும் ஐல்லி  கற்கள் விலையை ஒரு யூனிட்டுக்கு ரூபாய் ஆயிரம் வரை  உயர்த்துவதாக முடிவு செய்து தற்போது உயர்த்தியுள்ளார் கள். சமீபத்தில்தான் கிரஷர் உரிமையாளர்கள் விலையை உயர்த்தினார்கள். தற்போது மீண்டும் விலைவுயர்வு என்பது  பொதுமக்கள் மற்றும் கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ள பொறியாளர்கள், கட்டிட ஒப்பந்ததாரர்கள், பல லட்சம் கட்டு மானத் தொழிலாளர்கள், கட்டிடப் பொருட்கள் விற்பனையா ளர்கள், லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் ஆகியோருக் கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த விலை உயர்வால்  நடந்து கொண்டு இருக்கக்கூடிய கட்டிட வேலைகளும் பாதிப்புகுள்ளாகும் மற்றும் புதிய கட்டுமான வேலைவாய்ப்புகள் குறையும். விலையை உயர்த்த வேண் டும் என்ற நோக்கத்திற்காக தற்போது பொருட்களை கிரஷர்  உரிமையாளர்கள் வழங்காமல் செயற்கையான தட்டுப் பாட்டை உருவாக்கி வருகிறார்கள். இதனால் கட்டுமான வேலைகள் ஸ்தம்பிக்கும்.  எனவே பொதுமக்கள் மற்றும் கட்டுமானத் துறையை பெரும் பாதிப்புக்குள்ளாகும் கல் குவாரி கிரஷர் உரிமை யாளர்களின் எம் சாண்ட், பி சாண்ட் மற்றும் ஐல்லி மீதான  விலை உயர்வை திரும்ப பெற அரசு தலையிட்டு தக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மணல் குவாரிகள்  மூடப்பட்டுள்ளதும் இந்த விலை உயர்வுக்கு காரணமாக உள் ளது. எனவே மூடப்பட்டுள்ள மணல் குவாரிகளை திறப்பதற் கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என  மனுவில் வலியுறுத்தினர். உதகை இதைபோன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஆவலகத்தில் நீலகிரி கட்டிடப் பொறியாளர்‌ சங்கத்தினர் முற்றுகை போராட் டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு, அச்சங்க தலை வர் திலக், செயலாளர் மாதேஷ், பொருளாளர் ஹரிஹரன்  ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட கட்டிடப் பொறி யாளர்கள் கலந்து கொண்டனர்.