districts

img

திருப்பூரில் தெரு நாய்கள் நடமாட்டம் அதிகரிப்பு

திருப்பூர், ஆக.11- திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய் கள் அதிகரித்துள்ளதால், நாய் கடிக்கு உள்ளா னவர்களின் எண்ணிகையும் அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள்  கடும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும், இப்பிரச்சனையில் அரசு  நிர்வாகத்தின் நடவடிக்கை பயனளிக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 10 ஆயிரம் தெரு நாய்கள் திருப்பூர் மாநகராட்சியில் மொத்தம் 60  வார்டுகள் உள்ளன. இதில், கடந்த 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 10 ஆயி ரம் தெரு நாய்கள் கண்டறியபட்டு உள்ளன.  தற்போது அதன் எண்ணிக்கை அதிகரித்துள் ளது. கடந்த 2020 ஆண்டு வரை தெரு நாய் பெருக் கத்தை கட்டுப்படுத்தும் வகையில், நாய்க ளுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை  செய்து, பராமரித்து மீண்டும் அதை பிடிக்கப் பட்ட இடத்தில் கொண்டு விட ஒரு நாய்க்கு,  ரூ.440 வழங்கப்பட்டு வந்தது. அதற்கான ஒப்பந் தம் 2020 ஜனவரியில் நிறைவு பெற்றது. தற்போது  தனியார் தொண்டு நிறுவனம் மூலம் தெரு நாய் கள் பிடிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவக்  கல்லூரி மருத்துவமனை கொடுத்துள்ள தகவல் படி. ஜனவரி மாதம் தொடங்கி ஜூன் வரையி லான 6 மாதத்தில் மட்டும் 1,158 பேர் தெரு நாய்  கடிக்கு ஆளாகி, சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். ஜூன் மாதம் மட்டும் 263 பேரை நாய்கள் கடித் துள்ளன. நாளொன்றுக்கு சராசரியாக 20  முதல்  30 பேர் வரை நாய்கடிக்கு சிகிச்சை பெற்று வரு வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரு நாய்கள் தொல்லை குறித்து பொது மக்கள் சிலர் கூறுகையில், திருப்பூரில் அனைத் துப் பகுதிகளிலும் தெரு நாய்கள் அதிகரித்து விட்டன. இதனால், வீதிகளில் நடந்து செல்பவர் கள், வாகனங்களில் செல்பவர்கள், பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் பள்ளி குழந்தைகள் அச் சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. காலை நேரங்களில் பலரை தெரு நாய்கள் கடிப்பது, குழந்தைகளை துரத்துவது, வாகனங்களின் குறுக்கே செல்வதால் வாகன ஓட்டிகள் நிலை  தடுமாறி கீழே விழுவது, குறிப்பாக இறைச் சிக்கடை உள்ள பகுதியில் கூட்டமாக திரிவது  என பொதுமக்களுக்கு தெருநாய்கள் அச் சத்தை ஏற்படுத்தி வருகின்றன. தெருநாய்க ளால் நாளுக்கு நாள் தொல்லை அதிகரித்து  வருகிறது. நாய் கடிக்கு ஆளாவோர் முறை யான சிகிச்சை மேற்கொள்ள பணிக்கு விடுப்பு எடுக்க வேண்டிய சூழல் உள்ளது. மாதத்திற்கு இரு தினங்கள் விடுப்பு  எடுக்க வேண்டும் என்பதால் வருவாயும் குறைகி றது. நாய்களை பிடிக்க மாநகராட்சிக்கு தகவல்  அளித்தால், தனியார் நிறுவனத்தின் தொலை பேசி எண்ணை தந்து அவர்களை அழைக்க சொல்கிறார்கள். முறையாக பதில் அளிப்ப தில்லை. சிலசமயம் அலைபேசியை எடுப்ப தில்லை. அலைபேசியை எடுத்தாலும் புகார்  அளிக்கும் நபரிடம், நாய்களைப் பிடிக்க வந்து  செல்ல பணம் கேட்கிறார்கள். நாய்களைப் பிடித் துச் சென்றாலும் சில நாட்களில் மீண்டும் பிடித்த  இடத்திலேயே விட்டுவிடுகிறார்கள். அரசு இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்ற னர்.

என்ன சொல்கிறார் கவுன்சிலர்?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த  53ஆவது வார்டு கவுன்சிலர் ஆர்.மணிமேகலை  இது குறித்து கூறுகையில், 53 ஆவது வார்டு பகு தியில் தெரு நாய்கள் அதிகரித்துவிட்டது. குழந் தைகள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருக்கும் தெரு நாய்களால் இன்னல்கள் ஏற்பட்டு வருகிறது. இது தொடர் பாக மாநகராட்சி ஆணையாளரிடம் புகார் அளித்துள்ளோம். நாய்களைப் பிடித்து வேறு இடத்தில் விடுவதற்கு ஏதேனும் வாய்ப்பு உள் ளதா என்று கூட கேட்டோம். அதற்கு ஆணை யாளர் வாய்ப்பே இல்லை, நாய்களுக்கு கருத் தடை செய்து எங்கு பிடிக்கப்பட்டதோ மீண்டும்  அதே இடத்தில் தான் விட முடியும் என்றார். மன்ற  கூட்டங்களிலும் இது தொடர்பாக பல வார்டு கவுன்சிலர்கள் புகார் அளித்துள்ளனர். அனைத்து இடங்களிலும் நாய்கள் பிரச்சனை உள்ளது. இதற்கு உரிய தீர்வு காண அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும், என்றார். இதுகுறித்து நகர சுகாதார அலுவலர் தெரி விக்கையில், கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை தனியார் தொண்டு நிறுவ னம் மூலம் 2500 நாய்கள் பிடிக்கப்பட்டு கருத் தடை செய்யப்பட்டுள்ளது. பொதுவாக நாய் களை காலை 5:30 மணி முதல் 7.30 மணி வரை மட் டுமே பிடிக்க முடியும். அதுவும், நாய் பிடிப்பதற் கான பயிற்சி மேற்கொண்டவர்கள் மட்டுமே நாய்கள் பிடிக்க வேண்டும் என சட்டம் உள்ளது.  அதன்படி நாயை பிடித்து ஒரு நாள் வைத்து அது  அறுவை சிகிச்சை செய்வதற்கு தகுதியுள்ள நாயா என்பதை கண்டறிந்த பின், அறுவை சிகிச்சை செய்து, மூன்று முதல் ஐந்து நாட்கள்  பராமரிப்பில் வைத்து, ராபீஸ் தடுப்பூசி போட்டு அதன்பின் பிடிக்கப்பட்ட இடத்திலேயே மீண் டும் விடப்படும். நாய்கள் எந்த இடத்தில் பிடிக்கப் படுகிறதோ அதே இடத்தில் மீண்டும் விட வேண் டும் என்பதுதான் சட்டம். மாநகராட்சி சார்பில் நாய்களை பிடிப்பதற்கு இரண்டு புதிய வாக னங்கள் பெறப்பட்டுள்ளது. 4 நபர்களுக்கு நாய் பிடிப்பதற்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தெரு நாய்களின் தொல்லைகள் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் மன்ற கூட்டத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, புதிய ஏபிசி பெர்த் கண்ட்ரோல் சென்டர் அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது அனி மல் ஹஸ்பெண்டரி டிபார்ட்மெண்ட் பரிந்து ரைக்கு ஏற்ப இடம் பார்க்கப்பட்டு வருகிறது. இடம் அமைந்த உடன் புதிய சென்டர் அமைக் கப்படும். மேலும், கூடுதலான நபர்களுக்கு நாய்  பிடிப்பதற்கு பயிற்சி அளிப்பதற்கான நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சட் டப்படி நாய்களைப் பிடித்து கருத்தடை செய்து  மீண்டும் அதே இடத்தில் விட வேண்டும். அந்த  நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது. நாய்க ளைப் பிடித்து, பராமரித்து, தடுப்பூசி போட்டு விடுவிப்பதற்கு நாய் ஒன்றுக்கு ரூ.1600 மாந கராட்சி சார்பில் வழங்கப்படுகிறது. நாய் பிடிக்க  வருபவர்கள் பணம் கேட்டால் தக்க ஆதாரத்து டன் மாநகராட்சியில் புகார் அளித்தால், உரிய  நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். தெரு நாய்கள் அதிகரித்து வரும் அதே வேளையில், மறுபுறம் நாய் பிடிப்பதற்கு ஆகும்  செலவும் அதிகரித்துள்ளது. 2020 வரை ஒப்பந்த  அடிப்படையில் நாய் ஒன்றுக்கு மாநகராட்சிக்கு 400 ரூபாய் செலவான நிலையில், தற்போது தனியார் தொண்டு நிறுவனம் மூலம் நாய்கள் பிடித்து பாராமரித்து, ராபீஸ் தடுப்பூசி போட்டு மீண்டும் பிடித்த இடத்திலேயே விடுவதற்கு ஆகும் செலவு நான்கு மடங்கு அதிகரித்து 1600 ரூபாயாக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் இப்பிரச்சனை உள்ளது என்பதால், மாநில அரசு இது தொடர்பாக சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.