திருப்பூர், ஏப்.23 - திருப்பூர் தெற்கு ஒன்றியம், வஞ்சி நகர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளை சார்பாக பெயர் பலகை திறப்பு விழா ஞாயிறன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மயில்சாமி தலைமை வகித்தார். ஜனநாயக வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் சிங்காரவேலன் கலந்துகொண்டு சங்க பெயர் பலகையை திறந்து வைத்தார். மாவட்ட செயலாளர் செ.மணிகண்டன் வாலிபர் சங்க கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட தலைவர் எஸ்.அருள், மாவட்டக் குழு உறுப்பினர் கே.சிந்தன், ததிஒமு மாவட்ட துணைத் தலைவர் சண்முகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஸ்ரீராம், முத்துமணி, மாதேஷ், முத்துசாமி, முருகேஷ், தனபால், பொன்னம்பலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிறைவாக, மணிகண்டன் நன்றி கூறி நிறைவு செய்தார்.