கோவை, அக்.25- மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப் பட்ட புதிய ரேசன் கடை திறப்புவிழா வெள்ளியன்று நடை பெற்றது. கோவை மாநகராட்சி 48 ஆவது வார்டுக்கு உட்பட்ட சித்தா புதூர் ஹரிபுரம் பகுதியில், சிபிஎம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், புதிய ரேசன் கடை கட்டடம் கட்ட, 2023 ஆம் ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதி ரூ 7.20 லட் சம் ஒதுக்கீடு செய்திருந்தார். இதன் கட்டுமானப் பணிகள் நிறை வடைந்த நிலையில் வெள்ளியன்று, பொதுமக்கள் பயன்பாட் டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் பிரபா ரவீந்திரன் திறந்து வைத் தார். இதில், உதவிப் பொறியாளர் குமரேசன், ரேசன் பொருள் விற்பனையாளர் கிருஷ்ணகுமார், திமுக செயலாளர் சசிக் குமார், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கனக ராஜ், கிழக்கு நகரக்குழு செயலாளர் என்.செல்வராஜ் மற்றும் டி.வி.ரமணி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய மண்டல செயலாளர் கே.ரவீந்திரன், ஆர்.சுதர்சன் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.