districts

img

பிஏபி பாசன சங்க தேர்தலில் தேர்வானவர்கள் பதவியேற்பு

உடுமலை, ஏப்.20- பிஏபி பாசன சங்க தேர்தலில் தேர்வான தலைவர்கள் செவ்வாயன்று பதவியேற்றுக் கொண்டனர்.  பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் பிஏபி.,யில், கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் திங்களன்று நடைபெற்றது. இதில், திருமூர்த்தி கோட்டம் உடுமலை தாலுகாவில் கண்ணமநாயக்கனூர், கோட்டமங்கலம், பூளவாடி, முக்கூடு ஜல்லிபட்டி, பூலாங் கிணறு, விருகல்பட்டி, சோமவாரபட்டி என 7 கிராம நீரினைப்  பயன்படுத்துவோர் சங்கத் தலைவர்கள் மற்றும் 8 ஆட்சி மண் டலத்தொகுதி உறுப்பினர்கள் தேர்தல் மூலமாகவும், மற்ற வர்கள் போட்டியின்றியும் தேர்வு செய்யப்பட்டனர். இதேபோல, அமராவதி பாசன திட்டத்தில் கடத்தூர்  பழைய வாய்க்கால், துங்காவி 2, சர்க்கார் கண்ணாடிப்புத் தூர், கொழுமம் கோதையம்மன் குளம் கிராம நீரினை  பயன்படுத்துவோர் சங்கத்தலைவர்கள் தேர்வு மூலமாக வும், மற்றவர்கள் போட்டியின்றியும் தேர்வு செய்யப்பட்ட னர். இதைத்தொடர்ந்து கிராம நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் மற்றும் போட்டியின்றி தேர்வானவர்கள் செவ்வாயன்று (ஏப்.19) குடிமங்கலத்தில் நடைபெற்ற விழாவில் பொறுப் பேற்றுக் கொண்டனர். இதைத்தொடர்ந்து நிர்வாகக்குழு வின் முதல் கூட்டமும்  நடைபெற்றது. முன்னதாக, செயற் பொறியாளர் கோபி தலைமையிலும், உதவி செயற்பொறி யாளர் காஞ்சித்துரை முன்னிலையிலும் நடைபெற்ற பதவி யேற்பு விழாவில் முத்துக்குமார், விஜயசேகர் உள்ளிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் பாசன சங்க விவ சாயிகள் பங்கேற்றனர்.