கோவை, நவ.30- மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பி.ஆர்.நடராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியி லிருந்து கட்டப்பட்ட ரேசன் கடை கட்டிட திறப்பு விழா சனி யன்று நடைபெற்றது. கடந்த முறை கோவை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பி.ஆர்.நடராஜன், கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்திற்குட் பட்ட, கைக்கோளபாளையத்தில் வாடகை கட்டடத்தில் ரேசன் கடை இயங்கி வந்தது. இங்கு சொந்த கட்டடத்தில் ரேசன் கடை அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் மார்க்சிஸ்ட் கட்சியின் எம்பியாக இருந்த பி.ஆர்.நடராஜனிடம் கோரிக்கை வைத்தனர். இதனையேற்று புதிய ரேசன்கடை கட்டுவ தற்கு ரூ.15லட்சம் தொகுதி மேம்பாட்டு நிதி யில் இருந்து ஒதுக்கினார். இதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து சனியன்று புதிய ரேசன் கடை திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன் ஆகியோர் பங்கேற்று கட்டித்தை திறந்து வைத்தனர். முன்னதாக, இந்நிகழ்விற்கு எஸ்.எஸ்.குளம் வட்டார வளர்ச்சி அலுவ லர் தனலட்சுமி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.எஸ்.கனகராஜ், ஆர். கோபால், ஒன்றியச் செயலாளர் வெள்ளியங் கிரி, மூத்த தோழர்கள் மணி என்கிற நடரா ஜன், தங்கவேலு, வெள்ளானைப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா, துணைத் தலைவர் ராஜன், கைக்கோளபாளையம் கிளைச் செயலாளர்கள் சுப்பிரமணியன், அமிர்தலிங்கம், திமுக ஒன்றியச் செயலாளர் சுரேஷ், காங்கிரஸ் வட்டாரச் செயலாளர் நாக ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் மோகன், மதிமுக பகுதி செயலா ளர் விசுவராஜ் மற்றும் கொமதேக நிர்வாகி கள் என திராளனோர் பங்கேற்றனர். சொந்த கட்டடத்தில் ரேசன் கடை அமைக்க நிதி ஒதுக் கீடு செய்து, கட்டிடம் வருவதற்கு பெரும் முயற்சி மேற்கொண்ட பி.ஆர்.நடராஜனுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.