districts

img

புதிய வளர்ச்சி பணிகள் துவக்கி வைப்பு

கோபி, நவ.4- வாணிப்புதூர் பேரூராட்சியில் ரூ.1 கோடியே 10 லட்சம்  மதிப்பீட்டிலான புதிய வளர்ச்சி பணிகளை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் பங்கேற்று துவங்கி வைத்தார் ஈரோடு மாவட்டம், அந்தியூர் தொகுதிக்குட்பட்ட வாணிப்பு தூர் பேரூராட்சியில் புதிய வளர்ச்சி பணிகளுக்கான தொடக்க  நிகழ்ச்சி நடைபெற்றது. ராஜம்மாள் வீதி, ஹனுமன்நகர், கும ரன்கோவில், பள்ளத்து மேடு, வேலப்பன்காடு, காட்டூர்வீதி, சிவசக்தி நகர், உள்ளிட்ட பகுதிகளில் கலைஞரின் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 10 லட்சம்  மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி, குடிநீர் குழாய் விஸ்தரிப்பு பணி மற்றும் வாணிப்புதூர் பேருந்து நிறுத் தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகளை அந்தி யூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் ஏ.ஜி.வெங்க டாசலம் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் புவனேஸ்வரி, பேரூராட்சி தலைவர் டி.எம். சிவராஜ், துணை தலைவர் கருப்புச்சாமி, ஒன்றிய அவைத் தலைவர் கருப்புசாமி, ஒன்றிய செயலாளர் சிவபாலன் என  பலர் கலந்து கொண்டனர்.