ஈரோடு, ஜூன் 23- ஈரோட்டில், ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் நவீனப்படுத் தப்பட்ட வசந்தம் கோ-ஆப் டெக்ஸ் நிலையத்தை வியா ழனன்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். ஈரோடு மாநகராட்சிக்குட் பட்ட காந்திஜி சாலையில் உள்ள வசந்தம் கோ-ஆப்டெக்ஸ் நிலை யத்தை நவீனப்படுத்தப்பட்டு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சி யர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித் தார். கைத்தறி, கைத்திறன் துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் தர்மேந் திர பிரதாப் யாதவ், கைத்தறி ஆணையர் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக் குநர் கே.விவேகானந்தன், ஈரோடு நாடாளு மன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, மாநக ராட்சி மேயர் சு.நாகரத்தினம், சட்டமன்ற உறுப்பினர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோ வன், ஏ.ஜி.வெங்கடாச்சலம், சி.கே.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து அமைச்சர் பேசுகை யில், கோ-ஆப்டெக்ஸ் 1935 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 88 ஆண்டுகளாக கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர் களுக்கும் சிறப்பாக சேவை புரிந்து வருகிறது. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் இந்தியா முழுவ தும் தனது 150 விற்பனை நிலையங்கள் மூலம் கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் துணி ரகங்களை சந்தைப்படுத்தி வருகிறது. அதன் மூலம் கைத்தறி நெசவா ளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு வழங்கி வருகிறது. அனைத்து கைத்தறி ரகங் களுக்கும் 10 முதல் 20 விழுக்காடு தள்ளு படி வழங்கப்படுகிறது. எனவே, இச்சலுகையை பயன்படுத்தி பெருமளவில் வாடிக்கையாளர்கள் இவ்விற் பனை நிலையத்திற்கு வருகை தந்து கைத் தறி ரகங்களை வாங்கி பயனடையவும், கைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். மேலும், வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப இல்லத்திலிருந்தே தேர்வு செய்யும் வகையில் மின்னனு வர்த்தகம் வசதி செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் களுக்கு பிடித்த ரகங்களை வாங்க விருப்பம் தெரிவித்தால், அவர்கள் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படும், என்றார்.