districts

img

கற்றல் மையம் திறப்பு – அமைச்சர் பங்கேற்பு

கோவை, ஜூலை 27- கிணத்தக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி யில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியி யல் மற்றும் கணிதம் கண்டுபிடிப்பு மற்றும்  கற்றல் மையத்தினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  சனியன்று திறந்து வைத்து பார்வையிட்டார். கோவை மாவட்டம், கிணத்தக்கடவு அரசு  மேல்நிலைப்பள்ளியில், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும கணிதம் கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையத்தினை (STEM Innovation and Learning center) இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையின் முன்னிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  முன்னதாக, 12 அரசு பள்ளிகளுக்கு அறி வியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும்  கணிதம் ஆய்வக உபகரணங்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வழங்கினார்.