districts

img

மின் ஊழியர் மத்திய அமைப்பின் கல்வெட்டு திறப்பு

கோவை, ஜூலை 5- சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் முன்னத்தி ஏர்களான மறைந்த தி.ஜானகிராமன், எஸ்.பஞ்ச ரத்தினம், டி.எஸ்.சுப்பையன் ஆகி யோரின் நினைவு கல்வெட்டு கோவையில் திறக்கப்பட்டது. சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மறைந்த முன்னாள் மாநிலச் செயலாளர் டி.எஸ். சுப்பை யின் 8 ஆம் ஆண்டு நினைவு தினம் மற்றும் மறைந்த முன்னாள் மாநிலத் தலைவர் எஸ்.பஞ்சரத்தினம், டி. ஜானகிராமன் ஆகியோரது நினை வாக திங்களன்று டாடாபாத் மின்வா ரிய மத்திய அலுவலகம் முன்பு கல் வெட்டு திறக்கப்பட்டது. இந்நிகழ் விற்கு, சங்கத்தின் மாநிலச் செயலா ளர் வி.மதுசூதனன் தலைமை தாங்கி னார். மாநிலத் துணைத்தலைவர் டி. கோபாலகிருஷ்ணன் வரவேற்புரை யாற்றினார். சிஐடியு மாவட்ட தலை வர் சி.பத்மநாபன், மாவட்ட செயலா ளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். தோழர் எஸ். பஞ்சரத்தினம் திருவுருவப்படத் தினை கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் திறந்து வைத் தார். கல்வெட்டினை பொதுச்செய லாளர் எஸ்.ராஜேந்திரன் திறந்து வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் பொதுச்செய லாளர் ராஜோந்திரன் பேசுகையில், தனியாரிடம் மின்சாரம் வாங்குவ தால் தான் மின்சார வாரியத்திற்கு  நட்டம் ஏற்படுகிறது. போர்க்கால அடிப் படையில் மின்சார வாரியத்தை சரி செய்ய வேண்டும்.

மின்சார பணியா ளர்களை ஒப்பந்த முறையில் நியமிப் பதை தடுத்து நிறுத்த வேண்டும். மின்சார ஊழியர்களுக்கு வழங்கும் பாதுகாப்பு உபகரணங்களை தரத்து டன் வழங்க வேண்டும். மின்சார வாரி யத்தில் போராடி பெற்ற உரிமை களை ஒன்றிய, மாநில அரசுகள் பறிப் பதாக, குற்றஞ்சாட்டினார். இதைத்தொடர்ந்து, சங்கத்தின்  கோவை தெற்கு கிளை சார்பில் முதல் கட்டமாக 373 கோட்டி இதழ் சந்தா வும், சிஐடியு இதழ் 10 சந்தாவும், 6  தீக்கதிர் நாளிதழ் சந்தாவும், சிஐடியு நடத்தும் நிர்மல் பள்ளிக்கு உதவி யாக 4 ஆயிரம் ரூபாயும் சங்கத்தின்  மத்திய அலுவலக செயலாளர் பழனிச் சாமி மற்றும் விஜயராகவன் வழங்கி னர். இதில் ஏராளமானோர் பங்கேற்ற னர். முடிவில் மாநகர் இணைச்செய லாளர் ஏ.சாதிக் பாட்சா நன்றி கூறி னார்.