districts

img

ஈரோடு: அரசு பல்நோக்கு மருத்துவமனை திறப்பு

ஈரோடு, மார்ச் 13- தந்தை பெரியார் அரசு மாவட்ட தலைமை பல்நோக்கு மருத்துவமனையை, தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின் பொள் ளாச்சியில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். எட்டு மாடிகள் கொண்ட பல்நோக்கு  உயர் சிறப்பு சிகிச்சை பிரிவுகள் கொண்ட மருத்துவமனையின் கீழ்தளத்தில் வாகனங் கள் நிறுத்துமிடமும், தரை தளத்தில் அவசர சிகிச்சை, உள்நோயாளிகள் பகுதி, மகப்பேறு அவசர சிகிச்சை, நுண்கதிர் பிரிவு  பகுதிகளும் செயல்படும். முதல் தளம் மகப் பேறு பகுதி, இரண்டாம் தளம் பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தைகள் பகுதி, 3ஆம் தளம் மகப்பேறு அறுவை அரங்கம், பின் கவனிப்பு பகுதி, 4ஆம் தளம் இருதய சிகிச்சை மறும் தீவிர மருத்துவ சிகிச்சை பகுதி, 5ஆம் தளம் புற்று நோய் சிகிச்சை, காப்பீட்டு சிகிச்சை பகுதி, 6ஆம் தளம் எலும்பு மருத்துவம், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, கட்டண சிகிச்சை பகுதி, 7ஆம் தளம் சிறுநீரகவியல், நரம்பியல் அறுவை சிகிச்சை பகுதி மற்றும் கட்டண சிகிச்சை பகுதி, 8ஆம் தளத்தில் கருத்தரங்க கூடம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், சிறுநீரகவியல், குழுந்தை, நரம்பியல், பிளாஸ்டிக், இருதயவியல், புற் றுநோயியல் மற்றும் சிறுநீரகவியல் மருத்து வர்களும், அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் உள்ளிட்ட 124 புதிய பணி யிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.  இதனை, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன், மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் உள்ளிட் டோர் மருத்துவமனை கட்டடத்தைப் பார்வை யிட்டனர். கோபி இதேபோன்று, கோபி அரசு மருத்துவ மனையில் ரூ.6 கோடியே 89 லட்சம் மதிப் பீட்டில் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவு  கட்டிடத்தை, முதல்வர் கணொளி காட்சி  வாயிலாக திறந்து வைத்தார். கோபி மருத்து வனையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோபி அரசு மருத்துவமனை தலைமை மருத்து வர் கலாபிரியா புதிய கட்டடத்தில் குத்துவி ளக்கேற்றினார். இந்நிகழ்வில் அரசு மருத் துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்ட னர்.