districts

img

இடைத்தேர்தல்: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பணிமனை திறப்பு

ஈரோடு, ஜன. 25- ஈரோடு கிழக்கு தொகுதி யில் மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணியின் தேர் தல் பணிமனை பெருந்துறை சாலையில் புதனன்று திறக் கப்பட்டது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவையடுத்து, பிப்.27 ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் ஒன்றிய அமைச்சரும், மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இந்நிலையில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பி னர் அ.கணேசமூர்த்தி தலைமையில், தேர்தல் பணிமனையினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். அப் போது வேட்பாளர் இளங்கோவன் பேசுகை யில், தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கி ரஸ் என்றோ, திமுக என்றோ, மதிமுக என்றோ,  கம்யூனிஸ்ட் கட்சிகள் என்றோ, விசிக என்றோ வேறுபாடுகள் கிடையாது. எல்லோரும் மதச் சார்பின்மையில் நம்பிக்கை கொண்டவர்கள். அதற்காக உழைத்துக் கொண்டிருப்ப வர்கள். தமிழ்நாட்டைக் காத்துக் கொண்டிருக் கும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கரத்தை பலப்படுத்துவதற்கு மிகப்பெரிய வெற்றியை  மக்கள் தருவார்கள் என்ற நம்பிக்கை இருக் கிறது. அதுதான் ஸ்டாலினுக்கும், ராகுல் காந் திக்கும் நாம் சூட்டுகின்ற மகுடமாக இருக் கும். என் மகனைப் போல், என் தந்தையைப் போல், என் தாத்தா பெரியாரைப் போல் மக்க ளுக்காக உழைப்பேன், என்றார். இதில், வீட்டுவசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி, மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர். ரகுராமன், செயற்குழு உறுப்பினர்கள் ஆர். கோமதி, ஆர்.விஜயராகவன், எஸ்.சுப்ரமணி யன், நகர செயலாளர் பி.சுந்தரராஜன் உள் ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.