districts

img

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி தலைமை தேர்தல் பணிமனை திறப்பு விழா

திருப்பூர், மார்ச் 27- இந்தியா கூட்டணியின், திருப்பூர் நாடாளு மன்றத் தொகுதி தலைமை தேர்தல் பணி மனை திறப்பு விழா நடைபெற்றது. திருப்பூர் புதிய பேருந்து நிலையம், நெச வாளர் காலனிப் பகுதியில் அமைக்கப்பட் டுள்ள திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி தலைமை தேர்தல் பணிமனை திறப்பு விழா, திமுக வடக்கு மாவட்டச் செயலாளரும், சட்ட மன்ற உறுப்பினருமான க.செல்வராஜ் தலை மையில் நடைபெற்றது. தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பணி மனையை திறந்து வைத்தார். இதில், சிபிஐ மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ரவி வர வேற்றார். இதில், சிபிஎம் மாநிலக்குழு உறுப் பினர் கே.காமராஜ், திமுக வடக்கு மாநகரச் செயலாளர் ந.தினேஷ் குமார், திமுக தெற்கு  மாநகரச் செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜ், காங்கிரஸ் மாநகர மாவட்டத் தலைவர் ஆர். கிருஷ்ணன், இந்தியா யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் முஸ்தபா, மதிமுக மாவட் டச் செயலாளர் ஆர்.நாகராஜ், விசிக மாவட் டச் செயலாளர் ஏ.ஆர்.மூர்த்தி, கொமதேக மாவட்டச் செயலாளர் ரோபோ ரவி, மமக மாவட்டத் தலைவர் நஸ்ருதீன், ஆதித்தமி ழர் பேரவை மாவட்டச் செயலாளர் சின்னச் சாமி, திக மாவட்டத் தலைவர் முகில் ராசு, பார்வர்டு பிளாக் மாவட்டச் செயலாளர் கர் ணன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட் டச் செயலாளர் ராஜா முகமது, தவாக மாவட் டச் செயலாளர் சந்தோஷ், மக்கள் நீதி மையம் மாவட்டச் செயலாளர் ஜீவா உட்பட இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் திரளா னோர் பங்கேற்றனர்.