கோவை, ஏப். 6- மருதமலை கோவிலில் 5.20 கோடி மதிப்பிட்டில் மின்தூக்கி அமைப்பதற் கான திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் வியாழனன்று துவக்கி வைத்தார். கோவையில், மருத மலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக கட்டணசீட்டு வழங்கும் இடம் ஆகியவற்றுடன் கூடிய மின் தூக்கி 5.20 கோடி மதிப் பீட்டிலும் , மருதமலை அடி வாரத்தில் இருந்து மலைக் கோவில் வரையில் உள்ள தார்ச்சாலை சீரமைக்கும் பணியை 3.51 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் அமைப்பதற் கான திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி முலம் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார் பாடி, இந்து சமய அற நிவையத்துறை துணை ஆணையர் தர்ஷினி, துணை மேயர் வெற்றிச்செல்வன், கோவை மாவட்ட வன அலு வலர் ஜெயராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உள்ளிட் டோர் கோவையில் பங்கேற் றனர்.