திருப்பூர், மார்ச் 24- திருப்பூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர் களிடையே தமிழர்களின் மரபையும், தமிழ் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் பண்பாட்டு பரப்புரை நிகழ்வு வெள்ளியன்று உடுமலைப்பேட்டை ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் சார் பில் கல்லூரி மாணவர்களிடையே தமிழர்க ளின் மரபையும், தமிழ் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் மாபெரும் தமிழ் கனவு என்ற பெயரிலான பண்பாட்டு பரப்புரை நிகழ் வுகள் மாவட்டந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட் டத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், யாம றிந்த புலவரிலே என்ற தலைப்பில் கவிஞர் நந்தலாலா, மானுடம் வெல்லும் என்ற தலைப் பில் ஊடகவியலாளர் குணசேகரன் சிறப்பு ரையாற்றினர். திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ரு தன் ஜெய் நாராயணன் இத்திட்டம் குறித்து பேசினார். இதில், அரசு கலைக்கல்லூரி, உடு மலைப்பேட்டை வித்தியாசாகர் கலை அறிவியல் கல்லூரி, உடுமலைப்பேட்டை கம லம் கலை அறிவியல் கல்லூரி, அந்தியூர் என்.வி பாலிடெக்னிக் கல்லூரி, பெதப்பம் பட்டி அரசு தொழிற்பயிற்சி நிறுவனம், உடும லைப்பேட்டை பரியா செவிலியர் கல்லூரி, உடுமலைப்பேட்டை ருத்ரவேணி முத்துசாமி பாலிடெக்னிக் கல்லூரி, பாலப்பம்பட்டி அரசு தொழிற்பயிற்சி நிறுவனம், தாராபுரம் அரசு கலை அறிவியல் கல்லூரி, தாராபுரம் என மொத்தம் 9 கல்லூரிகளிலிருந்து 1100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்ட மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி வழிகாட் டுதலுக்கான கையேடும், தமிழ்ப் பெருமிதம் என்கின்ற கையேடும் வழங்கப்பட்டது.
இதில் தமிழ் பெருமிதம் கையட்டில் உள்ள ஏதே னும் ஒரு பக்கத்தில் உள்ள தகவல் குறித்து ஒரு நிமிடத்தில் தங்களுடைய சிறப்பான கருத்துக்களை தெரிவித்த மாணவ, மாண விகளை பாராட்டி பெருமித செல்வன் மற்றும் பெருமிதச் செல்வி என்கின்ற பட்டத்தோடு பரி சுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சி நடைபெற்ற வளாகத்தில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாணவர்களுக் கான வேலை வாய்ப்பு மற்றும் உயர் கல்வி வழிகாட்டு குறித்த கண்காட்சி, நான் முதல் வன் திட்டம் குறித்த கண்காட்சி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் இதர கடன் உதவிகள் தொடர்பான கண் காட்சி, மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் தாட்கோ நிறுவனத்தின் சார்பில் புத்தக அரங் குகள், மாவட்ட நூலகத்தின் சார்பில் சுய உதவி குழுக்களில் தயாரிக்கப்பட்ட பொருட் களின் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட் டிருந்தன. இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) பல்லவி வர்மா, சமூக பாதுகாப் புத்திட்ட தணித்துனை ஆட்சியர் அம்பாயிர நாதன், கல்லூரி முதல்வர் நா.ராஜேஸ்வரி, பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாண வியர்கள், துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.