மூலனூரில் ரூ. 58 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
தாராபுரம், அக்.30- மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.58 கோடிக்கு பருத்தி ஏலம் போனது. திருப்பூர் மாவட்டம், மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூட முதுநிலை செயலாளர் ஆர்.பாலச்சந்திரன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி விற்பனை மறை முக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த 233 விவசாயிகள் பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்தி ருந்தனர். அதேபோல், பருத்தியை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். அதிக பட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.10 ஆயிரத்து 102 ம், குறைந்தபட்ச விலையாக ரூ. 7 ஆயிரத்து 550 ம், சராசரி விலையாக ரூ. 8 ஆயிரத்து 450 க்கும் விலை போனது. மொத்தம் 2160 மூட்டைகள் 720 குவிண்டால் பருத்தி ரூ. 58 லட்சத்து 16 ஆயிரத்து 670 க்கு விற்பனையானது. இந்த ஏலத்தில் 12 வணிகர்கள் பங்கேற்றனர்.
விவசாயிகளுக்கு பயிற்சி
உதகை, அக்.30- நீலகிரி மாவட்டம், கூட லூரை அடுத்துள்ள அம்பல மூலா பகுதி விவசாயி களுக்கு தோட்டக் கலைத் துறை சார்பில் சனிக்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது. தோட்டக் கலைத் துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட் டத்தின் கீழ் மாங்கோடு, அம்பலமூலா பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு மாடித் தோட்டம் அமைத்தல் மற்றும் வாழை மதிப்பு கூட்டுதல் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்த பயிற்சிக்கு தோட்டக் கலை இணை இயக்குநர் ஷிபிலா மேரி தலைமை வகித்தார். விவசாயிகளுக்கு துறை சார்ந்த திட்டங்கள் குறித்தும் விளக்கமளிக்கப் பட்டது. வேளாண் பயிற்றுநர் ஆரோக்கியசாமி மாடித் தோட்டம் அமைப்பது குறித்து விளக்கமளித்தார். வேளாண் விற்பனைத் துறை அலுவலர் லட்சுமணன் மதிப்பு கூட்டுதல் மற்றும் பொருள்களை சந்தைப் படுத்துதல் குறித்து பயிற்சி யளித்தார். இந்த பயிற்சியில் வாழைக்காய் சிப்ஸ் செய் வது குறித்தும் செயல் விளக்கமளிக்கப்பட்டது. தோட்டக் கலை உதவி இயக் குநர் விஜயலட்சுமி மற்றும் அலுவலர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இருசக்கர வாகனம் மோதி பெண் பலி
நாமக்கல், அக்.30- நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந் தவர் கலா (57). கூலித் தொழிலாளி. இவர் சத்யா நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் 3 பேர் குடிபோதையில் வந்த தாக கூறப்படுகிறது. அவர் கள் சென்ற இருசக்கர வாகனம் திடீரென சாலை யில் நடந்து சென்ற கலா மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கலாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பள்ளி பாளையம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத் தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கலா பரிதா பமாக உயிரிழந்தார். இதை யடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பூட்டி இருந்த வீட்டில் 12 பவுன் நகை, 4.60 லட்சம் பணம் கொள்ளை
திருப்பூர், அக்.30- காங்கேயத்தில் பூட்டியிருந்த வீட்டில் கதவின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை ரூபாய் 4 லட்சத்து 60 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டது. திருப்பூர் பழைய கோட்டை ரோடு அய்யாசாமி நகரை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர் சர்வோதயா சங்கத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் கோவைக்கு திடீர் உடல்நலகுறைவு ஏற்பட்டது. இதை யடுத்து அங்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது குடும்பத்தாரும் கோவை புறப் பட்டு சென்றதால் வீடு பூட்டியே இருந்தது. இந்நிலையில், வெள்ளியன்று இரவு அடையாளம் தெரி யாத நபர்கள் வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 12 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 4 லட்சத்து 60 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளை யடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட ஏடிஎஸ்பி மற்றும் காங்கேயம் டிஎஸ்பி ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு சென்றனர். மேலும், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அப் பகுதி சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
ஆட்கொல்லி யானையால் மக்கள் அச்சம்
உதகை, அக்.30- உதகை அருகே உள்ள மாவனல்லா கிராம பகுதியில் சுற்றி திரியும் ஆட்கொல்லி யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் மாவனல்லா அருகே கூலி வேலைக்கு சென்ற மங்கலி என்ற பெண்ணை தாக்கி கொன்றது. அதனைத்தொடர்ந்து வாழைத்தோட்டம் கிராமத்தை ஒட்டி ஆடு மேய்த்து கொண்டிருந்த பெருமாள் என்ற முதியவரை யும் தாக்கி கொன்றது. இந்த யானை தொடர்ந்து கிராம பகு தியை ஒட்டியே சுற்றி திரிந்து வருவதால் பொதுமக்கள் அச்ச மடைந்துள்ளனர். மேலும், வாகனங்களை துரத்தும் இந்த யானையால் வாகன ஓட்டிகளும் அச்சமடைந்து வருகின்ற னர். எனவே, அடுத்த உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன் அந்த யானையை பிடிக்க வேண்டும் என அப்பகுதி கிராம பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 ஆம் வகுப்பு மாணவி மாயம்
கோவை, அக்.30- கோவையைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி நகை களுடன் மாயமானது குறித்து காவல் துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த 15 வயது சிறுமி, அப்பகுதியிலுள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வரு கிறார். இவர் கடந்த மார்ச் மாதம் வீட்டில் யாரிடமும் சொல்லா மல் வீட்டை விட்டு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால், சிறுமி கிடைக்க வில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலை யில் புகாரளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து, போலீசார் மாயமான சிறுமியை தேடி கண்டு பிடித்தனர். இதன் பின் போலீசார் அந்த சிறுமிக்கு அறிவுரைக்கூறி பெற்றோரி டம் ஒப்படைத்தனர். இந்நிலையில், சனியன்று வீட்டிலிருந்த சிறுமி, யாரும் இல் லாத நேரத்தில் வீட்டிலிருந்த நகைகளை எடுத்து கொண்டு மீண்டும் மாயமானார். சிறிது நேரம் கழித்து வீட்டில் நகை மற் றும் சிறுமி மாயமாகி இருந்ததை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பெற்றோர் மத்திய அனைத்து மக ளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நகைகளுடன் மாய மான 10 ஆம் வகுப்பு மாணவியை தேடி வருகின்றனர்.
பிளாஸ்டிக் பயன்பாடு: 10 கடைகளுக்கு சீல்
உதகை, அக்.30- நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன் பாடு குறித்து அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி 10 கடைகளுக்கு சீல் வைத்தனர். தமிழக அரசு ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட் களின் பயன்பாட்டை தடை செய்துள்ளது. ஆனால், நீலகிரியின் சுற்றுச்சூழலை கணக் கில் கொண்டு அதற்கு முன்னரே நீலகிரி மாவட்டத்தில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை செய்யப் பட்டு உள்ளது. ஆனாலும், சுற்றுலா பயணி களின் வருகையால் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில் கள் அதிகம் இருந்ததால் நீலகிரி மாவட்டத் தில் ஒரு லிட்டர், 2 லிட்டர் பிளாஸ்டிக் குடி நீர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்பாடு நீலகிரி மாவட்டத்தில் ஓரளவு குறைந்தாலும், தற்போது வரை பிளாஸ்டிக் பயன்பாடு பெரு மளவு அதிகரித்துதான் வருகிறது. இந்நிலையில், கொரோனா காரணமாக 2 வருடங்களாக வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த சுற்றுலா பயணிகள் இந்த முறை அதிகள வில் நீலகிரி மாவட்டத்திற்கு வந்தனர். குறிப் பாக கோடை சீசனை ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் சுமார் 8 லட்சம் பேர் இங்கு வந்து சென்றுள்ளனர். மேலும், இதனால் பிளாஸ் டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள் ளது. இதுதவிர, கடைகளிலும் தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், போதை பொருட் கள் பழக்கம் இருப்பதாக தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்துள்ளது. இதை யடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், அந்தந்த பகுதி வட்டாட்சியர்கள் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற் கொண்டனர். இதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டது. இதன்படி உதகை தாலுகா உட்பட 6 தாலுகாக்களிலும் 10 கடைகளுக்கு சீல் வைக் கப்பட்டு, ரூ.64 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டது. இதனிடையே ஆட்சியர் அம்ரித், வட் டாட்சியர் ராஜசேகர் தலைமையிலான அதி காரிகள் உதகை மார்க்கெட், சேரிங்கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட் கள் பயன்பாடு உள்ளதா? என்று ஆய்வு செய் தனர். மேலும், சுற்றுலா பயணிகளிடம் பிளாஸ் டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்கு மாறு ஆட்சியர் அறிவுறுத்தினார். இதேபோல் குன்னூர் வட்டம், பர்லியார் சோதனைச் சாவடியில் குன்னூர் வட்டாட்சியர் சிவக் குமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்சங்கர் ஆகியோர் தலைமையில் அரசு அலுவலர்கள் திடீர் தணிக்கை மேற்கொண்டு பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த னர்.
இல்லம் தேடி கல்வி திட்டம்: ஆட்சியர் ஆய்வு
தருமபுரி, அக்.30- தருமபுரி மாவட்டத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் 7 ஆயிரத்து 653 பெண் தன்னார்வலர்கள் தாமாக முன் வந்து தங்கள் பகுதிகளில் உள்ள 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் பயின்று வரும் 1,05,748 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவசமாக பாடங்களை கற்பித்து வருகின்றனர். இத்திட்டத்தினால் பள்ளி மாணவ, மாணவியர்களின் கற்றல் திறன் சிறப்பாக மேம்பட்டு வரு கின்றது. இதனிடையே காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கரகப்பட்டி கிராமத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு த ன்னார்வலர்கள் பாடங்களை கற்பித்து வருகின்றனர். இதனை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் வெ.தீபனா விஸ்வேஸ்வரி உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.
பள்ளி கட்டிடங்களின் உறுதித்தன்மையை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
கோவை, அக்.30- வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு பணி கள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுகூட்டம் கோவை ஆட்சி யர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட கண்கா ணிப்பு அலுவலரும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையாளருமான தாரேஸ் அகமது தலைமை வகித்து பேசு கையில், வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் மழை பெய் யும்போது அனைத்து சாலைகளிலும் தண்ணீர் தேங்காத வாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேம்பாலங்கள், சாலை கள் ஆகியவை பழுதடைந்து இருந்தால் நெடுஞ்சாலைத் துறை மூலம் உடனே சரி செய்ய வேண்டும். பொதுமக்க ளுக்கு குடிநீர் முறையாக சுத்திகரிக்கப்பட்டு தங்கு தடை யின்றி விநியோகம் செய்ய வேண்டும். ஆற்றங்கரையோரம் உள்ள கிராமங்களில் உரிய முறையில் அறிவிப்பு செய்ய வேண்டும். மணல் மூட்டைகள் போதுமான அளவில் வைத்து இருக்க வேண்டும். பழுதடைந்த மின் கம்பிகளை உடனே மாற்ற வேண்டும். மழை மானிகள், வயர்லெஸ் கருவிகள் நல்ல முறையில் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளில் மின் இணைப்பை சரிபார்க்க வேண்டும். திறந்தவெளி வடிகால் களை சுத்தம் செய்து மூடிடவும், பள்ளி கட்டிடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்யவும் வேண்டும். மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாத வகையில் பாதுகாக்க வேண்டும், என்றார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.
ஆடு, மாடு ஏலம்
சேலம், அக்.30- சேலம் மாவட்டம், தலை வாசல் அருகே வீரகனூரில் நேற்று ஆட்டுச்சந்தை கூடி யது. ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, தம்மம்பட்டி, பெரம்பலூர், சின்னசேலம் பகுதிகளில் இருந்து 1000 ஆடுகள், 400 மாடுகளை விற் பனைக்கு கொண்டு வந்த னர். சேலம், நாமக்கல், திருச்சி மட்டுமின்றி கேரளா வியாபாரிகளும் பங்கேற்ற னர். இதன் மூலம் ரூ. 60 லட் சத்துக்கு ஆடுகள், ரூ.27 லட் சத்துக்கு மாடுகள் என ரூ.87 லட்சம் ரூபாய்க்கு வர்த்த கம் நடைபெற்றது.
கார் விற்பனை அதிகரிப்பு; துணி விற்பனை குறைவு
கோவை, அக்.30- தீபாவளியை முன்னிட்டு கோவையில் ஆடம்பர டிவி, கார் விற்பனை அதிகரித்துள் ளது. அதேசமயம் பட்டாசு, துணிகள் விற் பனை குறைந்துள்ளது. கொரோனா நோய்தொற்று பரவலுக்கு பின்னர் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப் பட்டது. கோவை மாவட்டத்தில் ஆடம்பர பொருட்கள், குறிப்பாக டிவிக்கள், கார்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கார் விற் பனையாளர்கள் கூறுகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ஆடம்பர சொகுசு கார்கள் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப் பாக 10 முதல் 20 லட்சம் ரூபாய் வரையி லான கார்கள் அதிகளவு விற்பனை செய்யப் பட்டுள்ளன. இதுதவிர சிறிய ரக கார்கள் விற்பனையில் ரூ.6 லட்சம் முதல் ரூ.10 லட் சம் வரையிலான கார்களுக்கு வாடிக்கையா ளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
மொத்தத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகை யில், இந்த ஆண்டு தீபாவளிக்கு கார் விற் பனை 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதேபோல், தனியார் எலக்ட்ரானிக் மற் றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை யாளர்கள் கூறுகையில், இந்த ஆண்டு ஆடம் பர வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக 55, 43, 65, 75 இன்ச் எல்இடி டிவிக்கள் விற்பனை அதி கரித்தது. இவற்றின் விலை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1.5 லட்சம் வரையாகும். இதுதவிர ஆடம்பர மாடல் பிரிட்ஜ் ரூ.40 ஆயிரம் முதல் ரூ1.2 லட்சம் வரை, வாஷிங் மெஷின் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை, சிறிய பொருட்களான மிக்சி, கிரைண்டர், வாட்டர் ஹீட்டர், கேஸ் அடுப்பு, விற்பனையும் நன் றாக இருந்தது. கடந்தாண்டு போலவே விற் பனை இருந்தது, என்றார். ஆனால், இந்த ஆண்டு பட்டாசு விலை 40 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளதால், விற் பனை சராசரி அளவில் தான் இருந்த தாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர். இதேபோன்று விலை உயர்வு காரணமாக கடந்த ஆண்டு விற்பனையை விட 20 சத விகிதம் குறைவாகவே ஜவுளிப்பொருட்கள் விற்பனையாகியுள்ளது. செல்போன்கள் தள்ளுபடியை வைத்தே விற்பனை நடை பெற்றது. இதனால் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையிலான செல்போன்கள் விற்பனை அதிகளவில் இருந்தது.