திருப்பூர், ஜூலை 25 - சுதந்திர போராட்ட வீரரும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலை மையிலான விடுதலை படையில் பெண்கள் பிரிவின் கேப்டனாக செயல்பட்ட வரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நிறுவ னத் தலைவர்களில் ஒருவருமான கேப்டன் லட்சுமியின் (ஜூலை 23) நினைவு நாளையொட்டி, 25 பெண் கள் தங்கள் கண்களை தானம் செய்ய உறுதியேற்பு வழங்கினர். கேப்டன் லட்சுமியின் 10ஆம் ஆண்டு நினைவு தினம் ஜூலை 23ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண் தான உறு திமொழி படிவம் வழங்கும் நிகழ்ச்சி திங்களன்று காலை 11 மணிக்கு திருப்பூர், தாராபுரம் சாலையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவம னையில் சங்கத்தின் மாவட்ட தலை வர் எஸ்.பவித்ரா தேவி தலைமை யில் நடைபெற்றது. மாதர் சங்கத்தினர் 25 பேர் வருகை தந்து தங்கள் கண்களை தானம் வழங்குவதாக, கண் தான படிவத்தில் உறுதிமொழி அளித்த னர்.
மருத்துவர் பாலாஜி முன்னிலை யில் உறுதிமொழி ஏற்று கையொப்ப மிட்டனர். தேச விடுதலைக்கான போராட்டத்தை நடத்திய கேப்டன் லட்சுமி அம்மாள் வழியில் மகளிர் விடுதலைக்கான போராட்டத்தில் வாழ்நாள் முழுவதும் தன்னை இணைத்துக் கொள்ளவும் மாதர் சங்கத்தினர் உறுதியேற்றனர். இந்நிகழ்வில் மாவட்ட செயலா ளர் கு.சரஸ்வதி, மாவட்டப் பொரு ளாளர் ஆர்.கவிதா, மாநில செயற் குழு உறுப்பினர் ஜி.சாவித்திரி, மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.மைதிலி, முன்னாள் மாவட்ட தலை வர் ஈ.அங்கு லட்சுமி, மாவட்ட துணைத் தலைவர் தெற்கு நகரம் சி.பானுமதி, துணை செயலாளர் கள் ஈ.வளர்மதி, வடக்கு ஒன்றியம் சி. பானுமதி, மாவட்ட குழு உறுப்பினர் ஜானகி, நிஷா, மினி, அம்சவள்ளி உள்பட திரளானோர் கலந்து கொண் டனர்.