சேலம், நவ.15- காவிரியில் ரசாயண ஆலைகளின் கழிவுகள் கலப்பதால் மீன்கள் டன் கணக்கில் செத்து கரை ஒதுங்குவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்ட நீர் கடந்த வாரம் நிறுத்தப்பட்டது. இத னால் குளங்கள் போல் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இந்த நீரில் ஏராள மான மீன்கள் காணப்படுகிறது. இந்த மீன்களை பிடித்து மீனவர்கள் விற்பனை செய்து வாழ்வாதாரம் ஈட்டி வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட் களாக தேங்கிய நீரில் டன் கணக்கில் மீன்கள் செத்து கரையின் இரு புறங்களிலும் ஒதுங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சேலம் கேம்ப், சின்னக்காவூர், தங்கமா புரிபட்னம் பகுதிகளில் கடும் துர் நாற்றம் வீசி தண்ணீர் சுகாதார சீர் கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கருமலை கூடலில் செயல்பட்டு வரும் ரசாயண ஆலைகள் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் அப்படியே வெளியேற்றுகிறது. இந்த கழிவு நீரானது நுரையுடன் கலந்து காவிரியில் கலப்பதால் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதப்பதாக தெரிவித் தனர். மேலும், காவிரி நீரை பயன் படுத்தும் பொதுமக்கள் சளி, காய்ச்சல், தோல் அரிப்பு உள்ளிட்ட உபாதை களுக்கு ஆளாவதாகவும், விளை நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்தனர். எனவே ரசாயன ஆலைகளில் இருந்து வெளி யேறும் கழிவு நீர் காவிரி ஆற்றில் கலப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதி காரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.