districts

img

வன உரிமை சட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துக

கோவை, ஜூன் 27- வன உரிமை சட்டத்தை தமிழ்நாட்டில்  நடைமுறைப்படுத்த வேண்டும். அனைத்து  பழங்குடியின கிராமங்களுக்கும் மின்சாரம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தின் ஆனைமலை பகுதிக்குழு நிர்வாகி கே. மணி தலைமை ஏற்றார். இதில், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட செய லாளர் வி.ஆர்.பழனிச்சாமி, மலைவாழ் மக் கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.வேலுச் சாமி, செயலாளர் வி.எஸ்.பரமசிவம், பொரு ளாளர் பி.முத்தம்மாள், தென்னை விவசாயி கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஸ்டா லின் பழனிச்சாமி, சிபிஎம் ஆனைமலை தாலுகா குழு உறுபபினர் பி.பி.மகேந்திரன் ஆகியோர் உரையாற்றினர்.  முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் முன்வைக் கப்பட்ட கோரிக்கைகளை மனுக்களை பொள் ளாச்சி சார் ஆட்சியரிடம் வழங்கி பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். இதனை பெற் றுக்கொண்ட அவர், தனது அதிகாரத்திற்குட் பட்ட கோரிக்கைகளை உடனடியாக செய்து  தருவதாக உறுதியளித்தார். ஆர்ப்பாட்டத் தில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 

நாமக்கல்

இதேபோல, தமிழ்நாடு மலைவாழ் மக் கள் சங்க நாமக்கல் மாவட்டக்குழு சார்பில், கொல்லிமலை, செம்மேட்டில் செயல்பட்டு வரும் பழங்குடி இன திட்ட அலுவலர் அலுவ லகம் முன்பு செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட தலை வர் எஸ்.தங்கராஜ் தலைமை ஏற்றார். ஒன்றிய செயலாளர் சின்னையன், எஸ்.சி.சிவனேசன், துரைசாமி, சின்னப்பையன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலை வர் வி.கே.வெள்ளைச்சாமி, கொல்லிமலை ஒன்றிய தலைவர் எஸ்.கே.மாணிக்கம் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றி னர். இதில், வாலிபர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் எம்.மணிகண்டன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.டி.கண்ணன் உட்பட பலர் கலந்து கொண் டனர். இதையடுத்து, மலைவாழ் மக்கள் சங் கத்தினர் கொல்லிமலை பழங்குடி இன திட்ட அலுவலரை சந்தித்து கோரிக்கைகள் அடங் கிய மனுவை அளித்தனர். சங்கத்தின் மாவட்ட துணைச்செயலாளர் கே.வி.ராஜ் நன்றி கூறி னார்.