ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக பேசி முடித்திட வலியுறுத்தி சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர்கள் 24 மணி நேர தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை பணிமனை முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் பொது செயலாளர் வேளாங்கன்னிராஜ் தலைமை தாங்கினார்.
இதில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 2003 பிறகு பணியில் சேர்ந்த அனைவரையும் பழைய பென்ஷன் திட்டத்தின் கீழ் இணைக்க வேண்டும். வரவுக்கும் செலவுக்கும் ஆன வித்தியாச தொகையை அரசே வழங்க வேண்டும்.
தொழில் உறவை சீர்குலைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். ஓய்வு பெற்றோர் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்புகளை அமலாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த 24 மணிநேர உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.