districts

img

கண்டதையும் படித்தால் பண்டிதனாக முடியாது

பழ.கருப்பையா பேச்சு

புதுக்கோட்டை, பிப்.21- கண்டதiயும் படித்தவன் பண்டிதனா வான் என்ற பழமொழி அபத்தமானது. நல்ல புத்தகங்களைத் தேடிப் படித்தால்தான் அறிவு வளரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பழ.கருப்பையா. புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் வியாழக்கிழமை அவர் பேசியது: கண்டதiயும் படித்தவன் பண்டிதனாவான் என்ற பழமொழி அபத்தமானது. புத்தகங்க ளை தேர்வு செய்து படிக்க வேண்டும். உலகைத்தெளிவாகப் புரிந்து கொள்ள அனுபவம் மட்டும் போதாது. பிறரின் அனுபவங்களும் அவசியம். பிறரின் அனு பவங்களையும் நூல்கள்தான் நமக்குத் தரு கின்றன. ஒருகாலத்தில் அறிவை செல்வமும், அதிகாரமும் கொண்டாடியது. அதாவது அறிவு வீற்றிருக்க செல்வம் சேவை செய்ய வேண்டும். ஆனால், இப்போது செல்வத்தை யும் அதிகாரத்தையும் அறிவு சுமக்கும் நிலை வந்திருக்கிறது. கவிஞர்களும், புலவர்க ளும் அதிகாரத்தைக் கண்டு மண்டியிடு கிறார்கள். ஆங்கிலேயர்கள் நம்மை பல ஆண்டுகள் அடிமைப் படுத்தினாhர்கள். கொள்ளை யடித்தார்கள். என்றாலும், குலக்கல்வியை மறுத்து எல்லா மக்களும் படிக்க வேண்டும், எல்லா மக்களும் ரயிலில் ஏற வேண்டும் என்றவர்கள் ஆங்கிலேயர்கள் என்பதை மறுக்க முடியாது. எது சிறந்தது என்பதைத் தேடிப் பார்த்து அதனைப் போற்றினால்தான் சிறந்தவை வளரும் என்றார் பழ. கருப்பையா. நிகழ்ச்சிக்கு டாக்டர் சா.ராம்தாஸ் தலைமை வகித்தார். முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டச் செயலர் சு. மதியழகன் வரவேற்றார். டாக்டர் கே.எச். சலீம் உள்ளிட்டோர் பேசினர். முடிவில் செ.இளையராஜா நன்றி கூறினார்.