திருப்பூர், டிச. 5 - திருப்பூர் ஒன்றியம் இடுவாய் ஊராட்சி பாரதிபுரம் நடுநி லைப் பள்ளி தமிழகத்தின் சிறந்த பள்ளிகளில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக பள்ளியில் பயிற்றுவிக்கும் தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற் றது. திங்களன்று காலை 10 மணிக்கு பள்ளி வளாகத்தில் நடை பெற்ற இவ்விழாவில் தலைமை ஆசிரியர் காளீஸ்வரி சுப்பிரம ணியம் வரவேற்றார்.இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் கே . கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், துணைத் தலைவர் எஸ்.பரமசிவம், திருப்பூர் நிலவள வங்கி இயக்குநர் கே.ஈஸ்வரன், இடுவாய் ஊராட்சியின் முன்னாள் துணைத் தலைவர் எஸ்.சொக்கப்பன், ஊராட்சிமன்ற உறுப்பி னர்கள் எம்.கணேசன், மணி, பூவதி பிரகாஷ், கூட்டுறவு சங்க இயக்குநர் இந்திராணி, வள்ளுவர் நகர் சின்ராஜ் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர், அவர்களது பெற்றோர் கலந்து கொண்ட னர். தலைமையாசிரியர் காளீஸ்வரி சுப்பிரமணியத்துடன் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும், பள்ளி ஊழி யர்களுக்கும், ஊராட்சி தலைவர் கே.கணேசன், விழாவில் பங்கேற்ற முக்கிய விருந்தினர்கள் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். பள்ளியின் துணை தலைமை ஆசிரி யர் நன்றி தெரிவித்தார்.