அவிநாசி, பிப்.10 - அவிநாசி அருகே தாமரைக்குளம் ஏரி மேட்டில் சிலை வைப்பதற்காக, சிவபுரம் சைவ மகா அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் மரத்தை வெட்டியுள்ளனர். அவிநாசி ஒன்றியம், மங்கலம் சாலையில் சுமார் 180 ஏக்கர் பரப்பளவில் தாமரைக்கு ளம் அமைந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கன்னிமார், விநாயகர் சிலை கள் வைத்து வழிபாடு செய்து வந்தனர். இந்நிலையில் சிவபுரம் சைவ மகா அறக் கட்டளை என்ற பெயரில் சிலர் அங்கு வந்து ஏற்கனவே இருந்த சிலைகளுடன், சிவன் சிலை, விநாயகர் சிலை, நந்தி சிலை ஆகிய வற்றை வைத்துள்ளனர். இந்த சிலைகளுக்கு கதவுகளுடன் கூடிய கட்டடங்கள் அமைத்து அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள னர். இதற்கு முன்பு பொதுமக்கள் வழிபட்டுக் கொண்டிருந்த கன்னிமார், விநாயகர் சிலை முன்பிருந்த நிலையிலே உள்ளது. இதில் புதிய சிலை மற்றும் பழைய சிலைகளுடன் சேர்த்து, மிகப்பெரிய கூடாரம் அமைக்கப் பட்டு கதவுகளுடன் கூடிய காம்பவுண்ட் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்பு குறித்து அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அலுவலர்கள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து பொதுப்பணி துறையினர் ஆய்வு மேற்கொண்டு இரு தினங் களில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள் ளும்படி கூறியுள்ளனர். இந்து முன்னணியி னர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுப்ப ணித்துறை அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மீண்டும் அங்கு சிலை வைப்பதற்காக, அங்கிருந்த மரத்தை வெட்டியுள்ளனர். இதுகுறித்து அவிநாசி கிராம நிர்வாக அலு வலருக்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக் கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அதிகாரி ஆய்வு மேற்கொண்டபோது, அறக்கட்டளையைச் சேர்ந்த நிர்வாகி, இதனை சுத்தம் செய்து சிலை வைப்பதற்காக கிளுவை மரத்தைத் தான் வெட்டியுள்ளோம் என்று கூறினார். இது குறித்து கிராம நிர்வாக அதிகாரியிடம் கேட்ட போது, ஆய்வு மேற்கொண்ட விபரத்தை வட் டாட்சியருக்கு கடிதம் கொடுக்க உள்ளோம் என தெரிவித்தார். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதி காரியிடம் கேட்டபோது, இரண்டு நாட்கள் அவகாசம் அளித்துள்ளோம். செவ்வாய்க் கிழமை ஆக்கிரமிப்புகளை நிச்சயமாக எடுத்து விடுவோம், அதேபோல காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம் என தெரிவித்தார். மேலும் பொது மக்களால் வைக் கப்பட்டிருந்த கன்னிமார், விநாயகர் சிலை, எந்த வருடம் வைக்கப்பட்டது என்பதை கல் வெட்டு அமைத்து இருந்தனர். இதனை அறக் கட்டளை நிர்வாகிகள் அப்புறப்படுத்தி விட்டனர். பொதுப்பணித் துறைக்கு சொந்த மான நிலத்தை ஆக்கிரமித்து, மரத்தை வெட் டுவது, மேலும் சிலைகளை வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின் றனர். இது போன்ற நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தெரிவித்தனர்.