districts

ஐ.ஏ.ஏஸ் தேர்வு முடிவுகள் கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் தமிழகத்தில் முதலிடம்

புதுதில்லி, ஆக.4-  ஐ.ஏ.ஏஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிக ளுக்காக கடந்த 2019 செப்டம்பர் மாதம் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் திங்க ளன்று வெளியிடப்பட்டன. கன்னியாகுமரி யை சேர்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் தேசிய அளவில் ஏழாவது வது இடம் பிடித்துள்ளார் கடந்த 2019-ஆம் செப்டம்பர் மாதம் பல்வேறு பதவிகளை நிரப்புவதற்காக நடந்த இந்தத் தேர்வை 829 பேர் எழுதினர்.  பொதுப் பிரிவில் 304 பேரும், பொருளா தார ரீதியாக பின்தங்கிய பிரிவில் (ஈ.டபிள்யூ. எஸ்) 78 பேரும், பிற பின்தங்கிய வகுப்பில் (ஓ.பி.சி) 251 பேரும், பட்டியல் சாதியினரில் 129 பேரும், பட்டியல் பழங்குடியினரில் 67 பேரும் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வு, தனிநபர் தேர்வு ஆகியவை கடந்த பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்றது. இதன் முடிவுகள் திங்களன்று வெளியிடப்பட்டன. தேசிய அளவில் பிரதீப் சிங் (6303184)முத லிடம் பிடித்துள்ளார்.  ஜெட்டின் கிஷோர் (0834194) இரண்டாமிடத்தையும் பெண்க ளில் பிரதீபா வர்மா (6417779) மூன்றா மிடத்தையும் பெற்றுள்ளனர். தமிழகத்தில் கன்னியாகுமரியை சேர்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் (4001533)  தேசிய அளவில் ஏழாவது இடம் பிடித்துள் ளார். தமிழகளவில் முதலிடம் பிடித்துள்ளார்.