districts

img

திருப்பூர் மாநகர மேயராக ந.தினேஷ்குமார் பதவி ஏற்றார்

முன்னோடி மாநகராட்சியாக மாற்றுவேன்

திருப்பூர் மாநகராட்சியை முன்னோடி மாநகராட்சியாக, ஊழ லற்ற மாநகராட்சியாக மாற்றுவேன் என்று புதிய மேயராக தேர்ந் தெடுக்கப்பட்ட ந.தினேஷ்குமார் கூறினார். திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் பதவி ஏற்றவுடன் செய் தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 21 மாநக ராட்சிகளில், திருப்பூரை முன்னோடி மாநகராட்சியாக, தன்னிறைவு பெற்ற மாநகராட்சியாக மாற்றிக் காட்டுவோம். தொலைநோக்கு திட் டங்களை செயல்படுத்தி வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வோம் என்று கூறினார். மேலும், தொழிலாளர்களுக்கும், தொழில் துறையினருக்கும் இருக்கிற கனவுகளை நிறைவேற்றும் வகையில் மாநகராட்சியின் பணிகள் இருக்கும். திருப்பூர் மாநகராட்சியில் அடிப்படை பிரச்சனைக ளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். உட்கட்டமைப்பு பலப்படுத்தப் படும். பாதாள சாக்கடை திட்டம், தார்ச் சாலை திட்டம் போன்றவை நிறைவடையாமல் உள்ளன. இந்த திட்டங்களை செய்து முடிப்பது தான் முதல் பணியாக இருக்கும். மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். வெளிப்படையாக நிர்வாகம் செய்யப்படும். போர்க்கால அடிப்படையில் நகர  மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து தீர்வு காணப்படும்  என்று கூறி னார்.

திருப்பூர், மார்ச் 4- திருப்பூர் மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த ந.தினேஷ் குமார் போட்டியின்றி தேர்வு செய் யப்பட்டார். திருப்பூர் மாநகராட்சி மேயருக் கான மறைமுக தேர்தல் வெள்ளி யன்று காலை மாமன்ற கூட்ட அரங் கில் நடைபெற்றது. இதில் மொத்த முள்ள 60 வார்டு கவுன்சிலர்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி களைச் சேர்ந்த 37 பேரும், சுயேட்சை  கவுன்சிலர்கள் இருவர் மற்றும்  அதிமுகவில் இருந்து திமுகவுக்கு மாறிய கவுன்சிலர் ராதாகிருஷ் ணன் என மொத்தம் 40 பேர் பங்கேற்ற னர். அதிமுக மற்றும் பாஜக உறுப் பினர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. மேயர் தேர்தல் அறிவிக்கப் பட்ட நிலையில் திமுகவை சேர்ந்த  49ஆவது வார்டு மாமன்ற உறுப்பி னர் ந.தினேஷ்குமார் மேயர்  பத விக்கு வேட்பு மனு தாக்கல் செய் தார். வேறு வேட்பாளர் யாரும் போட் டியிடாத நிலையில், தினேஷ் குமார் மேயராக தேர்வு செய்யப் பட்டார். இதை மாநகராட்சி ஆணை யர் கிராந்தி குமார் பாடி அதிகாப் ்பூர்வமாக அறிவித்து, மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றி சான்றி தழை தினேஷ்குமாரிடம் வழங்கி னார்.  இதையடுத்து செங்கோல் வழங்கப்பட்டு, மேயருக்கான அங்கி மற்றும் அணிகலன்களை அணிந்து வந்து மாமன்ற கூட்ட அரங்கில் அமர்ந்து அனைவருக் கும் நன்றி தெரிவித்து கையெழுத் திட்டார். தொடர்ந்து அனைவரு டன் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த நிகழ் வில் திருப்பூர் எம்.பி. சுப்பராயன், திருப்பூர் எம்எல்ஏ க.செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேயராக பொறுப்பேற்பதற்கு முன்பு  தினேஷ்குமார் திமுக மத் திய மாவட்ட அலுவலகத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய் தார்.

துணை மேயர் தேர்வு

திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பதவிக்கு இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி கவுன்சிலர் ஆர்.பால சுப்பிரமணியன் அறிவிக்கப்பட்டி ருந்தார். இதையடுத்து வெள்ளி யன்று மதியம் நடந்த மறைமுகத் தேர்தலில் அவர் மனுத் தாக்கல்  செய்தார். வேறு யாரும் மனுத்தாக் கல் செய்யவில்லை. இதையடுத்து அவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக,  மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி  அறிவித்து சான்றிதழை வழங்கி னார். இந்த நிகழ்விலும் அதிமுக, பாஜக கவுன்சிலர்கள் 20 பேர் பங் கேற்கவில்லை.