திருப்பூர், மார்ச் 4 – தமிழ்நாட்டில், திருப்பூரில் வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டு, கொலை செய்யப்படுவதாக உ.பி., பீகார் மாநிலங்க ளில் பாஜகவினர் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர். அங்கே அந்த கட்சியி னர் வதந்தியைப் பரப்பிக் கொண்டிருக்கும் நிலையில், திருப்பூரில் உள்ள பாஜகவினர் இங்குள்ள வடமாநிலத் தொழிலாளர்களைச் சந்தித்து பாதுகாப்புத் தருவதாக காட்டிக் கொண்டு, கபடத்தனமான அரசியலை அரங் கேற்றினர். திருப்பூரில் வட மாநிலத்தினர் தாக்கப்ப டுவதாக பொய்யான செய்தியைப் பரப்பிய இந்தி மொழி பத்திரிகை ஆசிரியர் மீதும், மற் றுமொரு பத்திரிகை உரிமையாளர் மீதும் திருப்பூர் மாநகர காவல், சைபர் பிரிவு காவல் நிலையம் ஆகியவற்றில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் பீகா ரில் பாஜகவை சேர்ந்த செய்தித் தொடர்பா ளர் ஒருவர் மீதும் தமிழக காவல் துறை வழக் குப் பதிவு செய்துள்ளது. அத்துடன் தமிழ கத்தின் அமைதியான சூழ்நிலையைக் கெடுக் கும் வகையில் வதந்தி பரப்பிய அவர்களைக் கைது செய்யவும் காவல் துறை தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுத்து வருகிறது. பீகார் சட்டமன்றத்திலும், தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பாஜகவினர் பொய் குற்றச்சாட்டை முன் வைத்து குழப்பம் விளைவித்து வரு கின்றனர். குறிப்பாக அங்கு பாஜகவுக்கு எதி ரான உள்ள ராஷ்டிரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம் ஆகியவற்றுக்கு எதிரான பிரச் சாரமாக இப்பிரச்சனையை பாஜகவினர் அங்கு கிளப்பி வருகின்றனர். பாஜகவினர்தான் தமிழ்நாட்டிற்கு எதி ரான வெறுப்புப் பிரச்சாரத்தை முன்னெ டுத்து வருகின்றனர் என்பது வெட்ட வெளிச் சமாகி வருகிறது. இந்த நிலையில் திருப்பூ ரில் உள்ள பாஜகவினர் வதந்திகளை நம்ப வேண்டாம், நாங்கள் பாதுகாப்புத் தருகி றோம் என்று ரயில் நிலையத்திலும், வட மாநிலத் தொழிலாளர்கள் தங்கியுள்ள பகுதி யிலும் போட்டோ எடுத்து சமூக ஊடகங்க ளில் வெளியிட்டு, யோக்கியர்கள் போலக் காட்டி வருகின்றனர். பாஜகவினரின் இந்த கபடத்தனமான அர சியலை இங்குள்ள வட மாநிலத் தொழிலா ளர்களே நன்கு புரிந்து வைத்துக் கொண்டு, இவர்கள்தான் பிரச்சனையைக் கிளப்பியது, எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி, எங்கள் உறவினர்களையும் பதற்றமடைய வைத்து விட்டு இப்போது நாங்கள் பாதுகாப்புத் தரு கிறோம் என்று ஏமாற்றப் பார்க்கின்றனர். இதை நாங்கள் நம்ப மாட்டோம் என்று தெளி வாகக் கூறினர்.
இருவர் மீது வழக்குப்பதிவு:
திருப்பூரில் வட மாநிலத் தொழிலாளர் கள் தாக்கப்படுவதாக உண்மைக்குப் புறம் பான செய்தியைப் பரப்பிய தெய்னிக் பாஸ்கர் என்ற பிரபல இந்தி பத்திரிகையின் ஆசிரியர் மீதும், தன்வீர் போஸ்ட் என்ற பத்திரிகையின் உரிமையாளர் முகமது தன்வீர் என்பவர் மீதும் மாநகர காவல் துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் துறை சனிக்கி ழமை விடுத்துள்ள செய்தி அறிக்கையில் கூறி யிருப்பதாவது: தெய்னிக் பாஸ்கர் பத்திரிகை யின் ஆசிரியர் மீது திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 (ஏ), 505 (ஐ) (பி), ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல் திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டப் பிரி வுகள் 153 (பி), 505 (2) (பி) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 56 (டி) ஆகியவற் றின் கீழ் தன்வீர் போஸ்ட் என்ற பத்திரிகை யின் உரிமையாளர் முகமது தன்வீர் என்பவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தூத்துக்குடி மாவட்டம் சென்ட்ரல் காவல் நிலையத்தில் உபியை சேர்ந்த பிரசாந்த் உமராவ் என்ற பாஜக செய் தித் தொடர்பாளர் மீது வழக்குப் பதிவு செய் யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள இவர்களைக் கைது செய்ய தமிழ்நாடு காவல் துறை தலைவர் உத்தரவின் பேரில் தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது. அமைதியை சீர்குலைத்து பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பொய் செய்திக ளைப் பரப்புவோர் பற்றிய விபரங்கள் காவல் துறையால் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர் கள் மீது காவல் துறை கடும் நடவடிக்கை எடுக் கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல் ஆணையர் நேரடி கள ஆய்வு
மேலும், திருப்பூர் மாநகர காவல் ஆணை யர் பிரவீன் குமார் அபிநவு வெள்ளியன்று இரவு திருப்பூர் ரயில் நிலையத்தில் நேர டியாக கள ஆய்வு மேற்கொண்டார். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அவர் கவனித் தார். அத்துடன் சனியன்று திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அபிநவு, இங்குள்ள பின்ன லாடை நிறுவனங்களில் நேரில் சென்று தொழி லாளர்களிடம் இங்கு பாதுகாப்பான சூழ்நி லை இருப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்ப டுத்தினார். மேலும் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள புகார் கட்டுப்பாட்டு அறை மற்றும் தொடர்பு எண் குறித்தும் விளக்கி கூறினார். சமூக வலைதளங்களில் பரவும் பொய் யான வீடியோக்கள் காரணமாக வட மாநில தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். அவர்களின் அச்சத்தை போக்கும் வகை யில் மாநகர காவல் துறை சார்பில் நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார். டுவிட்டர் கணக்கு முடக்கம் சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய தாக திருப்பூர் மாவட்டத்தில் மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வட மாநில தொழிலாளர்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக ஏற்கனவே, இரண்டு வழக்குகள் பதிவு செய்துள்ள நிலையில், திருப்பூர் மாவட் டத்தில் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவதூறு பரப்பிய நப ரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ள தோடு இது தொடர்பாக டிவிட்டர் நிர்வாகத் திற்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.