கோவை, ஜூன் 6- வால்பாறை பகுதியில் காயங் களுடன் மீட்கப்பட்ட புலிக்குட் டிக்கு வேட்டையாட பயிற்சி கொடுக்கப்பட்டு, மீண்டும் வனத் திற்குள் விடுவிக்கப்படும் என கோவை மாவட்ட வனத்துறையி னர் தெரிவித்துள்ளனர். வால்பாறை பகுதியில் கடந்த ஆண்டு 2 வயதுடைய ஆண் புலிக் குட்டி காயங்களுடன் திரிந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மானாம்பள்ளி வனத்துறையினர் காயமடைந்த புலிக்குட்டியை பிடித்து முகாமில் அடைத்தனர். பின்னர் மருத்துவக்குழுவினர் எப் படி காயமடைந்தது என ஆய்வு செய்ததில், முள்ளம்பன்றியுடன் நடந்த மோதலில் உடலிலும், வயிற் றிலும் முட்கள் குத்தி காயம் ஏற் பட்டதை உறுதி செய்து, சிகிச்சை அளித்து வந்தனர். கூண்டில் அடைக்கப்பட்டு கடந்த 7 மாதங் களாக மருத்துவ கண்காணிப்பில் இருந்தது.
எதுவும் உண்ணமுடி யாமல் இருந்ததால் 48 கிலோ எடை மட்டுமே இருந்தது. தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு உணவை உட்கொள்ளும் திறனை பெற்றது. தற்போது 144 கிலோ எடையுடன் முழு உடல்நலத்துடன் உள்ளது. இதற்கிடையே கடந்த பிப்ரவரி மாதத்தில் தலைமை வனப்பாது காவலர் புலிக்குட்டியை ஆய்வு செய்தார். அதன்பின்னர் அதனை வனத்தில் விடுவிக்க வேட்டை பயிற்சி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். புலிக்குட்டிக்கு உணவளித்து வேட்டை பயிற்சியின் போது கண்காணிக்க, பிரமாண்ட கூண்டு, வனத்துறையினர் கண்கா ணிக்க மரத்தில் பரண் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ரூ.75 லட்சம் செலவில் மதிப்பீட் டில், இயற்கையான சூழலில், புலிக்குட்டியின் வேட்டை திறனை மேம்படுத்த, தேசிய புலிகள் ஆணையம் வழிகாட்டுதலின்படி கூண்டு அமைக்கும் பணி நடை பெற்று வந்தது. இந்நிலையில், மானாம்பள்ளி வனச்சரகத்தில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட கூண்டிற்குள், கோவை மாவட்ட வன அலுவலர் இராம சுப்பிரமணியம் மற்றும் ஆனை மலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன் தலைமை யில் புலிக்குட்டி விடுவிக்கப்பட் டது. அதனை கண்காணிக்க 24 மணி நேரமும் செயல்படும் கண்கா ணிப்பு கேமரா, 2 அடுக்கு கம்பி வலைகள் அமைக்கப்பட்டுள்ளது. புலிக்குட்டி வேட்டையாட முழு பயிற்சி பெற்றதும், அடர்ந்த வனப் பகுதியில் விடுவிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.