திருப்பூர், பிப். 3 - இனி அடுத்தடுத்து நிகழும் இரண்டு பேரழிவுகளுக்கு இடையில் தான் புதிய இயல் பான வாழ்க்கை இருக்கும். பூமி அழியுமா என் பதல்ல கேள்வி, மனிதர்கள் நாம் பிழைத்தி ருப்போமா என்பதே நம் முன் உள்ள பிரதான கேள்வி என காலநிலை மாற்றம் குறித்து பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் கோ.சுந்தர்ராஜன் எச்சரித்தார். 20ஆவது திருப்பூர் புத்தகத் திருவி ழாவில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிந்தனை அமர்வில் இயற்கை நாம் கற்றது என்ன? என்ற தலைப்பில் கோ.சுந்தர்ராஜன் கருத்துரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த 10ஆயிரம் ஆண்டு காலத் தில் சீராக இருந்து வெப்பநிலை கடந்த 150 ஆண்டுகளில் மோசமாக மாறிக் கொண்டிருக்கிறது. தொழில் புரட்சிக் காலத் திற்குப் பிறகு புதை வடிவ எரிபொருள்களை பயன்படுத்த தொடங்கியதால் இந்த வெப்ப நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. கரியமில வாயுவை வெளியேற்றி வளிமண் டலத்திற்கு செல்ல செல்ல பூமியின் வெப்பம் உயர்ந்து காலநிலையில் பல்வேறு மாற்றங் கள் ஏற்பட்டு வருகின்றன. மிகப் பெருமளவு வெப்பம் அதிகரிப்பு, தீவிரமான நோய்த் தொற்று தாக்குதல், வர லாறு காணாத பெருமழை, என்று முன்னெப் போதும் இல்லாத அளவிற்கு பேரழிவுகள் அதிகரித்துள்ளன. ஒவ்வொரு பேரழிவும் தீவிரமடைவதுடன்,
அடுத்தடுத்த பேரழிவு களுக்கு இடையே உள்ள கால இடை வெளி சுருங்கிக் கொண்டிருக்கிறது. ஏற்படக் கூடிய பேரழிவுகள் நம்மால் கணிக்க முடியா ததாக உள்ளது. உலகளாவிய அரசுகளுக்கு இடையே யான காலநிலை மாற்ற அமைப்பு, குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகின் வெப்பநிலை குறித்த மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அந்த அமைப்பு சமீபத் தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், வேறு எந்த காரணமும் இல்லாமல் மனித செயல்பாடுகள் என்ற ஒரே காரணத்தால் பூமி யின் வெப்பநிலை மாற்றம் ஏற்பட்டு வரு கிறது. இது மறுக்க முடியாத உண்மை என் றும் தெள்ளத் தெளிவாக குறிப்பிட்டு இருக் கிறது. இனிமேல் இரண்டு பேரழிவுகளுக்கு இடையில் தான் புதிய இயல்பான வாழ்க்கை இருக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பாரிஸ் உச்சி மாநாட்டில் பூமியின் வெப்பநிலையை இன்னும் 1.5 செல்சிய ஸிற்கு அதிகமாகாமல் கட்டுப்படுத்த வேண் டும் என்று கூறியது. ஆனால் 2023 ஆம் ஆண்டு கூடுதலாக 1.48 செல்சியஸ் என்ற அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த ஒரு லட்சம் ஆண்டுகளிலேயே மிக அதிக வெப்ப நிலை பதிவான ஆண்டாக 2023 ஆம் ஆண்டு உள்ளது என்று உலக வானிலை நிறுவனம் அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு அதை விட கூடுதல் வெப்பநிலை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
2050 ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளி யிட்டில் நாம் சமநிலையை எட்ட வேண்டும். நீடித்த நிலையான வளர்ச்சியை எட்ட வேண் டும். தமிழ்நாட்டில் 11.6% பரப்பளவு பாலைவ னமாகி இருக்கிறது. பாலைவனம் என்றால் வெறும் மணல் பரப்பாக இருப்பதில்லை. வாழத் தகுதி இல்லாத இடமாக மாறி இருக் கிறது என்பதுதான் அர்த்தம். பொருளாதார வளர்ச்சி என்பது சுற்றுச்சூ ழலை காவு கொடுத்துள்ளது. இதனால் ஏற்பட் டிருக்கும் கால நிலை மாற்றம் பொரு ளாதாரப் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 150 - 200 ஆண்டுகளில் மனித குலம் பெற்ற மருத்துவ முன்னேற்றங்களை காலநிலை மாற்றம் இல்லாமல் செய்து விடும். டெங்கு, மலேரியா, வெப்ப அதிகரிப்பால் இதய அடைப்பு போன்ற நோய்கள் அதிக ரித்துள்ளன. சுகாதார பேரழிவு தான் மிகப்பெ ரிய சவாலாக இருக்கிறது. கடந்த காலத்திலும் பெரியம்மை, காலரா போன்ற தொற்று நோய்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் ஏற்படும் விலங்கியல் தொற்று நோய் கள் அவற்றுடன் ஒப்பிட முடியாததாக இருக் கிறது. கடந்த 1984 க்கும் 2018 ஆம் ஆண்டுக் கும் இடையே மட்டும் விலங்கியல் தொற்று நோய் தாக்கத்தால் உயிரிழந்தவர்கள் மூணே கால் கோடி பேர். காடுகளை அழித்து உள்ளே செல்லச் செல்ல அங்கு வாழும் விலங்குகள் அழுத் தத்திற்கு ஆளாகி எச்சில் மூலமாகவும், கழிவு கள் மூலமாகவும் தொற்று நோய்க் கிருமி களை பிற உயிர்களுக்கு கடத்துகின்றன. ஏறத் தாழ ஒரு லட்சத்து 67 ஆயிரம் தொற்று நோய் கிருமிகள் உள்ளதாக நுண்ணுயிர் ஆய் வாளர்கள் கூறுகின்றனர். பூமி அழியுமா என்பது அல்ல கேள்வி. இந்த பூமி இன்னும் பல கோடி ஆண்டுக ளுக்கு இருக்கும். ஆனால் மனிதர்களாகிய நாம் பிழைத்திருக்க போகிறோமா? இவ் லையா? என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி.
நீட், ஜிஎஸ்டி போன்ற பிரச்சனை களும் முக்கியம்தான். ஆனால் அவை எல் லாம் ஓர் ஆட்சி மாற்றத்தின் மூலமாகவோ, வேறு சில சூழ்நிலைகள் காரணமாகவோ தீர்க்கப்பட முடியும். ஆனால் காலநிலை மாற் றத்தை அப்படி தீர்க்க முடியாது. எனவே காடுகள் பரப்பை அதிகரிக்க வேண்டும். மின் சக்தி தயாரிப்பதற்கான முறைகளை மாற்ற வேண்டும். பொதுப் போக்குவரத்தை பயன்ப டுத்த வேண்டும். சிறுதானிய உணவு உண்ட பாரம்பரிய உணவு முறைக்கு மாற வேண் டும். 2050 ஆம் ஆண்டுக்குள் கார்பன் சம நிலை கொண்ட நிலையை எட்டுவதற்கு நிறைய அன்பும், கொஞ்சம் முயற்சியும் தேவைப்படுகிறது. நம் வாழ்க்கைக்கு தேவை யில்லாத விஷயத்தை மறுக்க வேண்டும். பயன்படுத்த வேண்டிய விஷயத்தை குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும். வாய்ப் புள்ள விஷயத்தை மறு பயன்பாடு செய்ய வேண்டும். கழிவுகளை மறுசுழற்சிக்கு உட்ப டுத்த வேண்டும். ஒருவர் தனிப்பட்ட முறையில் சுற்றுச் சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையை பின் பற்றுவதாக கூறலாம். ஆனால் சுற்றுச்சூ ழலை பாதிக்கும் கொள்கை முடிவுகளை எடுக்கும் போது ஆட்சியாளர்களையோ, கார்ப்பரேட் முதலாளிகளையோ எதிர்க் காமல் அவர் மௌனம் காப்பதால், சுற்றுப்புற சூழலையும், பூமி வெப்பம் ஆவதையும் தடுக்க முடியாது. பூமி வெப்பமாதலை அதிக ரிக்கும் விதத்தில் மேற்கொள்ளப்படும் கொள்கை முடிவுகளை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். ஒவ்வொருவரும் அவர்களால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்ய வேண் டும். இவ்வாறு பூவுலகின் நண்பர்கள் அமைப் பின் சுந்தர்ராஜன் கூறினார். முன்னதாக இந்த அமர்வுக்கு சைமா பொதுச் செயலாளர் கீதாஞ்சலி எஸ் கோவிந் தப்பன் தலைமை ஏற்றார். எம் பழனி வேல்சாமி வரவேற்றார். தமிழ்நாடு அறிவி யல் இயக்கம் ஜி. எம்.நஸீரா, பழ.விஸ்வ நாதன், என். கோபாலகிருஷ்ணன், இரா. ஜீவானந்தம், மாமன்ற உறுப்பினர் ஆர்.நாக ராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். யோகி செந்தில் நன்றி கூறினார்.