districts

img

மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும்

ஈரோடு, செப்.9- மனித உரிமை என்பது மனி தனை மனிதனாக மதிக்க வேண் டும் என்பதாகும். மக்களின் அடிப் படை ஆதாரங்களை பெற்றுத் தருவதே மனித உரிமைகள் ஆணை யத்தின் முதல் நோக்கமாகும் என்று  மாநில மனித உரிமைகள் ஆணை யத் தலைவர் நீதியரசர் எஸ்.பாஸ்கரன் பேசினார். ஈரோடு மாவட்டம், சத்திய மங்கலம் வட்டம், கடம்பூர் பகுதி யில் குத்தியாலத்தூர், குன்றி மற்றும் கூத்தம்பாளையம் உள் ளிட்ட மலைவாழ் கிராம மக்களுக் கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்  நடைபெற்றது. இதில் பழங்குடி யினர் நல அடையாள அட்டை, தையல் இயந்திரங்கள், தொழில் முனைவோர் திட்டத்திற்கான வங்கி  கடனுதவி, விபத்து நிவாரண நிதி உள்ளிட்ட 296 பயனாளிகளுக்கு ரூ.1.62 கோடி மதிப்பீட்டிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால்  சுன்கரா தலைமை வகித்தார். தமிழ் நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நீதியரசர் எஸ்.பாஸ்கரன் முன்னிலை வகித் தார். நீலகிரி நாடாளுமன்ற உறுப் பினர் ஆ.ராசா நலத்திட்ட உதவி களை வழங்கினர்.  முன்னதாக, இந்நிகழ்வில் நீதி யரசர் பாஸ்கரன் பேசுகையில், கடம்பூர் மலை கிராம பகுதியில்   சட்ட வழிப்புணர்வு முகாம் சிறப் பான முறையில் நடைபெறுகிறது. மனித உரிமை என்பது மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும் என்ப தாகும். மக்களின் அடிப்படை ஆதா ரங்களை பெற்றுத்தருவதே மனித உரிமைகள் ஆணையத்தின் முதல்  நோக்கமாகும். மனித உரிமை ஆணையத்தில் புகார் ஏதும் அளிக்க வேண்டுமானால், அஞ்சல்  மூலமாக எங்கள் அலுவலகத்திற்கு அனுப்பினால் அற்கான நடவ டிக்கை எடுக்கப்படும்.

மேலும், மின் னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். பொதுமக்களின் உரிமைகளை  பெற்றுத்தர மாநில மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். மேலும் கல்வி என்பது மிக முக்கி யமான ஒன்றாகும். கல்வி இல் லாமை நம்மோடு போகட்டும், நம்மு டைய குழந்தைகளை தொடர்ந்து படிக்க வைக்க வேண்டும். தமிழக  அரசின் சார்பில் கல்வியற்றவர் களுக்கு கல்வி அறிவு அளிக்கும்  வகையில் பல்வேறு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இதனை நாம் முழுமை யாக பயன்படுத்தி கல்வி கற்க வேண்டும். மேலும், அரசு வழங்குகின்ற திட்டங்கள் மற்றும் சேவைகளை நன்கு அறிந்து கொண்டு பயன் பெற வேண்டும். இயற்கை வளங் களை முழுமையாக பாதுகாக்க வேண்டும். மாசற்ற சூழ்நிலை ஏற் படுத்துவது நம் அனைவரின் கடமையாகும் என தெரிவித்தார். முன்னதாக, மலைவாழ் கிராம பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடை பெற்றது. விழாவில், பழங்குடி யினர் நலன் இயக்குநர் ச. அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மணிஷ், மாவட்ட வன  அலுவலர்கள் வெங்கடேஷ் பிரபு,  சுதாகர் (சத்தியமங்கலம்), கோபி செட்டிபாளையம் வருவாய் கோட் டாட்சியர் செல்வி.திவ்யபிரிய தர்ஷினி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்கடியினர் நல அலு வலர் குமரேசன், மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் நல அலுவலர் ரங்க நாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.