உடுமலை, மார்ச் 24- அரசு ஊழியர்களுக்கு சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த கோரி வெள்ளி யன்று உடுமலை மத்திய பேருந்து நிலையத் தின் முன்பாக ஜாக்டோ – ஜியோ கூட்டமைப் பினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தி னர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.பால சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவை தொகை மற்றும் உயர்கல்விக்கான ஊக்க ஊதியங்களை உட னடியாக வழங்க வேண்டும். தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணி புரியும் ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், எம்ஆர்பி செவிலியர், வருவாய்த்துறை கிராம உதவி யாளர்கள் மற்றும் ஊர்ப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஒருங் கிணைந்த பள்ளிக் கல்வித்துறையில் பணி புரியும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசுத்துறைகளில் இருக் கும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண் டும். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும். ஏழாவது ஊதியக்குழுவின் படி 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன. இந்த போராட்டத்தில் அமைப்பின் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மகாலிங்கம், பால் ராஜ், தமிழ்வாணன், ராமசாமி, முனியப் பன், ரமேஷ்வரன், வேலுமணி, விவேகானந் தன் குமார் உள்ளிட்ட திரளான அரசு ஊழி யர்கள் கலந்து கொண்டனர். அவிநாசி அதேபோல, அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே ஜாக்டோ - ஜியோவினர் மனித சங்கிலியாக கோரிக்கை பதாகைக ளுடன் முழக்கங்களை எழுப்பினர். இதில் ஜாக்டோ - ஜியோ அவிநாசி ஒருங் கிணைப்பாளர் வெள்ளிங்கிரி, செந்தில்கு மார், விஜயலட்சுமி, கருப்பன், மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கப்பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.