districts

ஊதிய உயர்வை உடனடியாக வழங்க கோரி மனிதச் சங்கிலி போராட்டம்

நாகர்கோவில், ஜூன் 2

    ஒன்றிய அரசின் பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். 4 ஜி. 5ஜி சேவைகளை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஊழியர்களுக்கு 1-1-2017 முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும், புதிய பதவி உயர்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவிலில் பி. எஸ். என். எல். ஊழியர் சங்கம் கூட்டமைப்பின் சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடந்தது.