கோவை, நவ.3- ஹோட்டல் தொழிலாளர்களுக்கு 20 சதவிகிதம் போனஸ் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி கோவையில் சிஐடியு ஹோட்டல் தொழி லாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு கோவை மாவட்ட லாட்ஜ், ஹோட் டல், பேக்கரி மற்றும் கேட்டரிங் தொழிலா ளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.மனோ கரன் தலைமை ஏற்றார். ஆர்ப்பாட்டத்தில் ‘ஹோட்டல் தொழிலாளர்களுக்கு 20 சதவிகி தம் தீபாவளி போனசை பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே வழங்கிட வேண் டும். குறைந்தபட்ச சம்பளமாக ரூ.26 ஆயி ரம் வழங்கிட வேண்டும். கூடுதல் நேர வேலைக்கு அதற்கு தகுந்த ஊதியத்தை வழங்கிட வேண்டும். சுகி, சொமோட்டோ தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறை வேற்றி அவர்களின் வாழ்வாதாரத்தை பாது காத்திட வேண்டும். இத்தொழிலாளர்களுக் கென தனி நல வாரியம் அமைத்திட வேண் டும்’ ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன. முன்னதாக ஆர்ப்பாட்டத்தின் நோக்கங் கள் குறித்து சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, துணை தலைவர் கே. ரத்தினகுமார், துணை செயலாளர் கே.சந் தோஷ் ஆகியோர் உரையாற்றினர். இதில், சங்கத்தின் பொருளாளர் பி.தங்கராஜ் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.