கோவையின் அமைதிக்கு அச்சுறுத்தல் விளைவிக்க
கோவை, மார்ச் 10– கோவையின் அமைதிக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட சமூகவிரோத நடவடிக்கை யில் ஈடுபட்ட பாஜக, விஎச்பி அமைப்பு களைச் சார்ந்த நால்வர் கைது செய்யப் பட்டுள்ளனர். கோவை மாவட்டம், நஞ்சுண்டா புரம் சாலையில் கடந்த வாரம் இந்து முன்னணி நிர்வாகி மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து இஸ்லாமிய அமைப்பினர் ஒருவரின் ஆட்டோ தாக்கப்பட்டது. இதேநா ளில் சரவணம்பட்டி காவல் எல்லைக் குட்பட்ட கணபதி பகுதியில் பள்ளிவா சலில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச்சென்றனர். இவ்வாறு கோவை யில் தொடர்ந்து பதட்டமான சூழல் நில வுகிற நிலையில் கடந்த இரண்டு நாட்க ளில் இருதரப்பைச் சேர்ந்த நான்கு ஆட் டோக்கள் அடுத்தடுத்து தாக்கப்பட் டது. இச்சூழலில் திங்களன்று இரவு காட்டூரில் உள்ள இந்து முன்னணியின் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக தெரிவிக்கப் பட்டது. இதைத்தொடர்ந்து செவ்வா யன்று எஸ்டிபிஐ அமைப்பை சேர்ந்த முகம்மது இக்பால் என்பவரை ஏழு பேர் கொண்ட மர்ம கும்பல் கடுமை யாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இத்தகைய விரும்பத்தகாத செயல்க ளின் காரணமாக கோவையின் அமை திக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது.
இந்நிலையில், கணபதியில் பள்ளி வாசலில் பெட்ரோல் குண்டு வீசிய சம் பவம் தொடர்பாக போலீசார் நடத் திய தீவிர விசாரணையில் இந்து முன் னணியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை சின்ன வேடம்பட்டியில் செவ்வாயன்று காலை சரவணம்பட்டி வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது போலீசாரை கண்டதும், இருவர் தப் பிக்க முயன்றுள்ளனர். அவர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டபோது, அவர்கள் ரத்தி னபுரியை சேர்ந்த பாண்டி (எ) சடை யாண்டி(41)(பாஜக) மற்றும் அகில் (23) (விஎச்பி) என்பதுதெரியவந்தது. மேலும், அவர்கள் இந்து முன்னணி யின் கோவை மாவட்டச் செயலாளர் ஆனந்த் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கடந்த 5ம் தேதி அதிகாலை சுமார் 1 மணிக்கு பீர் பாட்டிலில் பெட்ரோல் குண்டு தயார் செய்து வேதம்பாள் நகர் பள்ளி வாசலில் வீசிவிட்டுத் தப்பி ஓடி யதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்த னர். இதனைத்தொடர்ந்து அவர்கள் பயன்படுத்திய இரண்டு சக்கர வாக னம், இரண்டு செல்போன் மற்றும் பெட்ரோல் குண்டு தயாரிக்க பயன்ப டுத்திய உபகரணங்களையும் கைப்பற் றிய போலீசார் குற்றவாளிகளை நீதி மன்ற காவலில் அடைத்தனர்.
இதேபோல் திங்களன்று கடைவீதி பகுதியில் இஸ்லாமியர் ஒருவரின் வாகனத்தை சேதப்படுத்தியதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் நடத்திய விசாரணையில் மணிகண்டன், ரஞ்சித் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், இச் சம்பவத்தில் தொடர்புடைய ராஜேஷ் மற்றும் வசந்த் ஆகியோரை காவல்து றையினர் தேடி வருகின்றனர். இவர்கள் நான்குபேரும் பாஜக, விஎச்பி மற்றும் இந்து முன்னணி போன்ற அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், எஸ்டிபி மாவட்டச் செயலாளர் முகமது இக்பால் தாக்கப் பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்கள் மற்றும் இந்து முன்னணி அலு வலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிச் சென்ற மர்மநபர்கள் குறித்து காவல்து றையினர் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்து கோவையில் நடைபெறும் இத்தகைய விரும்பத்தகாத சம்பவங்களின் கார ணமாக கோவையின் அமைதிக்கு திட் டமிட்டு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படு கிறதோ என்கிற ஐயம் எழுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.