districts

img

நெடுஞ்சாலைத்துறை அதிகாரியின் வாய்க்கொழுப்பு

சிபிஎம் ஆர்ப்பாட்டம் சேலம், பிப்.15- சாலையோர வியாபாரிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்துவதும், இதனை எதிர்த்து கேள்வி கேட்கிற பொதுவுடமை இயக்கங்கள் குறித்து இழிவாக பேசிவரும் நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறி யாளரின் வாய்க்கொழுப்பை கண்டித்து ஏற் காட்டில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். ஏற்காடு பகுதியில் சாலையோர வியா பாரிகள் 50க்கும் மேற்பட்டோர் படகு இல்லம் அருகில் கடை அமைத்து வியாபாரம் செய்து  வந்தனர். எளிய உழைப்பாளி மக்களின் வாழ் வாதாரமாய் உள்ள இந்த கடைகளை நடத்த விடாமல் தொடர்ந்து, ஏற்காடு செயற்பொறி யாளர் பிரபாகரன் என்பவர் இடையூறு செய்து வருகிறார். மேலும், சாலையோர வியாபாரிகளுக்கு ஆதரவாக இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி குறித்தும், இழிவாக பேசி வருவதும் தொடர்கிறது. சமீபத்தில், மார்க் சிஸ்ட் கட்சியினர் குறித்து இழிவாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியா னது குறிப்பிடத்தக்கது.  ஏழை, எளிய உழைப்பாளி மக்களை சுரண்டுவதும், அதனை எதிர்க்க வழியில்லாத  மக்களின் குரலாய் மார்க்சிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பினால் வாய்க்கொழுப்பாக பேசி வரும் நெடுஞ்சாலைத்துறை துணை செயற் பொறியாளரின் வாய்க்கொழுப்பை கண் டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். ஏற்காடு கோட்ட நெடுஞ் சாலை துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை துணை செயற்பொறியாளர் பிரபாகரனை பணிநீக்கம் செய்ய வேண்டும் எனவும், நடவ டிக்கை எடுக்கும் வரை மார்க்சிஸ்ட் கட்சி தொடர் போராட்டத்தில் ஈடுபடும் எனவும் தெரி வித்தனர்.  இதில் சிபிஎம் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா, செயற்குழு உறுப் பினர் எம்.குணசேகரன், ஏற்காடு தாலுகா செயலாளர் நேரு உள்ளிட்ட தாலுகா குழு உறுப்பினர்கள், சாலையோர வியாபாரிகள் திரளானோர் பங்கேற்றனர்.