தருமபுரி, மே 26- தருமபுரி நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலு வலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை ஊழியர் சங் கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெடுஞ்சாலை துறையில் பணியாற்றும் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் உடனே முதுநிலை பட்டியல் வெளியிட்டு முரண்பாடு இல்லாமல் பதவி உயர்வு வழங்க வேண்டும்.நெடுஞ்சாலைத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப் பப்பட வேண்டும் என்ப ன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப் பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நெடுஞ்சாலை துறை பணி யாளர் சங்க மாவட்ட செயலாளர் முனிவராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலை வர் எம்.சுருளிநாதன், மாவட்ட செயலாளர் ஏ.சேகர், மாவட்ட பொருளாளர் கே.புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.