திருப்பூர், அக்.12– தமிழ்நாடு முழுவதும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களையும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரி யர் காலிப்பணியிடங்களையும் உட னடியாக நிரப்புமாறு தமிழ்நாடு முது நிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில சிறப்புப் பொதுக்குழு கூட்டம் திருப்பூர், ஸ்ரீ காமாட்சி அம்மன் திருமண மண்டபத் தில் நடைபெற்றது. மாநிலத் தலை வர் இரா.பெருமாள்சாமி தலைமை யில் நடைபெற்ற பொதுக்குழுவில், திருப்பூர் மாவட்டத் தலைவர் ம. செல்வகுமார் வரவேற்றார். தீர்மா னங்களை முன்வைத்து மாநிலப் பொதுச்செயலாளர் சே.பிரபாகரன் பேசினார். மாநிலப் பொருளாளர் பொ.அன்பழகன் வரவு - செலவு கணக்குகளை சமர்ப்பித்தார். தீர்மானங்கள் இப்பொதுக்குழுவில், 2004ஆம் ஆண்டு தொகுப்பூதியத்தில் நியமிக் கப்பட்ட ஆசிரியர்களின் தொகுப்பூதி யக் காலத்தை முறையான பணிக் காலமாக அறிவிக்க வேண்டும். 2009ல் நியமனம் செய்யப்பட்ட ஆசிரி யர்களின் ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண்டும். பள்ளிக்கல்வி இயக் குநர் அளித்த வாக்குறுதிப்படி, சிறப்பு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரி யர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆசிரியர்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வும், இக்கோரிக்கைகளை வலியு றுத்தி வரும் டிசம்பர் 8ஆம் தேதி மாநி லம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட் டது. ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து தில்லியில் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்ட மைப்பு நவம்பர் 3இல் நடத்தும் பேர ணியில் கலந்து கொள்வது, ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை கண்டித்து சென்னை லயோலாக் கல் லூரியில் நடைபெறும் கல்வி உரி மைப் பாதுகாப்பு மாநாட்டில் பங் கேற்க வேண்டும் என்றும் தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், திருப்பூர் மாவட்டப் பொருளாளர் அ. பிரகாஷ் நன்றி கூறினார்.