districts

img

ஏற்காட்டில் கன மழை திருமணிமுத்தாறில் வெள்ளம்

சேலம், செப்.1- ஏற்காட்டில் பெய்த கன மழையால் திருமணிமுத்தாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றங்கரையோர வசிக் கும் மக்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் வியாழனன்று எச்ச ரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் பரவலாக கன மழை பெய்து வருகி றது. புதனன்று பெய்த மழையின் காரணமாக ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்காட்டில் பல்வேறு பகு திகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு ஆங்காங்கே போக்கு வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏற்காட்டில் இருந்து கீழ்நோக்கி வரும் தண்ணீர் திருமணிமுற்றாற்றில் கலக்கிறது. திருமணிமுத்தாற்றில் கலக்கப்படும் தண்ணீர் சேலம் மாநகராட்சி பகுதிகள் வழியாக செல்வதால் திருமணி முத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  திருமணிமுத்தாற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால் ஆற்றங்கரை ஓரம் வசிக்கும் பொது மக்களுக்கு சேலம் மாநக ராட்சி சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருமணிமுத்தாற்றில் வெள்ளப் பெருக்கால் ஆற்றங்கரை ஒட்டியுள்ள நீர்நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து, நிலத்தடி நீரும் உயரும் என்று எதிர் பார்க்கபடுகிறது.