உதகை, ஜூன் 29- தென்மேற்கு பருவமழையின் காரணமாக உதகையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரு கிறது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் பகு தியில் கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில், வெள்ளியன்று பகல் 3 மணி முதல் கனமழை பெய்ய துவங்கியது. பந்த லூர் பஜார் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் மட்டும் பெய்த இந்த கனமழையால், பந்தலூர் பஜார் மற்றும் அதனை ஒட்டிய குடி யிருப்பு பகுதிகள், விவசாயத் தோட் டங்கள் வெள்ளக்காடாக மாறி யது இந்த பகுதியில் இருந்து வெளி யேறிய தண்ணீர் செம்மண்வயல் விவசாய தோட்டங்கள் மற்றும் குடி யிருப்பு பகுதிகளில் நிரம்பி 40க் கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இந்த குடி யிருப்பில் உள்ளவர்கள் பொருட் களை பத்திரப்படுத்திவிட்டு உறவி னர் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். இதைபோல், பொன்னானி பகுதி யில் குடியிருப்பு பகுதிகளில் ஆற்று வெள்ளம் நிரம்பியதால், ஐந்து குடும்பங்களை சேர்ந்த 17 பேர் தற் காலிக முகாமில் தங்க வைக்கப் பட்டனர். உப்பட்டிபகுதியில் இருந்து கூடலூர் செல்லும் சாலை யில் அத்திமாநகர் என்ற இடத்தில், மூன்று இடங்களில் மண் சரிவு ஏற் பட்டது. இதில், உப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுனராக பணியாற்றும் நிஷா என்பவர், அவரது மகன் மற் றும் மகனின் நண்பருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, மண் சரிவில் சிக்கி காருடன் தேயிலை தோட்டத்திற்குள் அடித்து செல் லப்பட்டனர். கவுன்சிலர் ஆலன் மற் றும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மழையின் தீவிரம் அதி கரித்து வந்ததால் பொன்னானி ஆற் றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு பகுதிகள் வெள்ளக்கா டாக காட்சி அளித்தது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் பந் தலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் வாசுதேவன், வி.ஏ.ஓ. அசோக் குமார் தலைமை யிலான வருவாய்த் துறையினர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வரு கின்றனர். மண் சரிவு ஏற்பட்ட பகுதி யில் நெடுஞ்சாலை துறை மூலம் பொக்லைன் உதவியுடன் வெள்ளி யன்று இரவு மண் அகற்றப்பட்டு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட் டது. மூன்று மணி நேரம் பெய்த மழையில் பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகள் வெள்ளக்காடாக மாறி யது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. இதனையடுத்து, விவசாயிகள் பயிரிட்டு உள்ள இஞ்சி, வாழை, குறுமிளகு மற்றும் பிற பயிர்கள் மழையால் சேதமடைந்தது. இதனை மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவ சாய நிலங்களை பார்வயிட்டு விவ சாயிகளிடம் உரிய நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தனர். ஆனாலும் அறுவடை செய்யும் நேரத்தில் மழையின் காரணமாக விவசாய நிலங்கள் சேதம் அடைந்த தால் வாழ்வாதாரம் கேள்விக்குறி யானது. இதைதொடர்ந்து, கூடலூர் பகு தியில் பருவமழை தீவிரமடைந்த நிலையில், சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப் பட்டது. தொடரும் மழையினால், இங்கு உற்பத்தியாகும் பாண்டி யார் - புன்னம்புழா மற்றும் அதன் கிளை ஆறுகளில் வெள்ளப்பெ ருக்கு ஏற்பட்டுள்ளது. காட்டாற்றில் சிக்கிய யானை இந்நிலையில், வெள்ளியன்று, காலை ஓவேலி, தர்மபுரி பகுதி வனப்பகுதி வழியாக செல்லும், ஆற்றில், வெள்ளப்பெருக்கு ஏற் பட்ட நிலையில், நான்கு காட்டு யானைகள் ஆற்றைக் கடந்து சென் றது. அதில், ஒரு பெண் யானை, திடீ ரென நிலை தடுமாறி ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. அந்த யானை ஆற்று வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடி தத்தளித் தது. சுமார் 300 மீட்டர் தூரம் வரை அடித்துச் செல்லப்பட்ட யானை, சுய முயற்சியால் நீந்தி ஆற்றின் கரைக்கு சென்று உயிர்த்தப்பியது. இந்நிகழ்வை, பார்த்துக் கொண்டி ருந்த இளைஞர்கள், யானை உயிர் தப்பிப்பது தொடர்ந்து நிம்மதி அடைந்தனர். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், வனத்துறை யினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.