districts

img

சுங்க கட்டணம் கடும் உயர்வு டோல்கேட்டை முற்றுகையிட்டு போராட்டம்

கோவை, ஏப். 1- சுங்க கட்டண உயர்வு திரும்ப  பெறக்கோரி கோவை புறநகர்  டோல்கேட்டை முற்றுகையிட்டு  லாரி உரிமையாளர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்ன தாக, கட்டண உயர்வை திரும்ப பெறாவிட்டால் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக லாரி உரிமை யாளர்கள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்தனர். தமிழ்நாட்டில் 29 சுங்கச்சாவடி களில் சுங்க கட்டணம் ஏப்.1 முதல்  உயர்ந்துள்ளது. இந்த கட்டண  உயர்வு நள்ளிரவு 12 மணி முதல்  நடைமுறைக்கு வந்துள்ளது. சுங்கக்கட்டணம் ரூ.10 முதல் ரூ. 60 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, காருக்கு ரூ.60 லிருந்து  ரூ.70 ஆகவும் இலகுரக வாக னத்துக்கு ரூ.105 லிருந்து ரூ.115  ஆகவும், லாரி மற்றும் பேருந்து களுக்கு ரூ.2025 லிருந்து ரூ.240 ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய் யப்பட்டுள்ளது. இதன் காரணமாக  பொதுமக்கள் மற்றும் லாரி உரிமை யாளர்கள் கால் டாக்ஸி ஓட்டுநர்கள்  உள்ளிட்டவர்கள் அதிருப்தி  அடைந்துள்ள நிலையில், கோவை மாவட்டம் சூலூர், கணியூர் டோல் கேட்டில் சுங்க கட்டண உயர்வை  கண்டித்து கோவை லாரி உரிமை யாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த   ஆர்ப்பாட்டத்தில் கோவை,  திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த  லாரி உரிமையாளர்கள் மற்றும்  மினி லாரி உரிமையாளர்கள்  நூற்றுக்கு மேற்பட்டவர்  டோல் கேட்டை முற்றுகையிட்டு, ஒன்றிய  அரசு உடனடியாக சுங்க கட்டண  உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி  முழக்கங்களை எழுப்பினர்.  இதனைத்தொடர்ந்து, செய்தி யாளர்களிடம் பேசிய லாரி உரிமை யாளர்கள் சங்க தலைவர் முரு கேசன் கூறுகையில்,  5 சதவிகிதத்தில் இருந்து 25சத விகிதம் அளவிற்கு  சுங்க கட்டணம்  உயர்ந்துள்ளது. இதனால், லாரி  தொழில் செய்பவர்கள் மிகுந்த  அளவில் பாதிக்கப்பட்டுள்ளார் கள். இதனால் பாரி கட்டணங்கள் உயர்த்த வேண்டிய சூழல் ஏற்படு கிறது. உடனடியாக ஒன்றிய அரசு  இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும், இல்லை யேல் அடுத்த கட்டமாக வேலை  நிறுத்த போராட்டத்தில் ஈடுபடு வோம் என எச்சரித்தனர்.

சிஐடியு முற்றுகை

இதேபோன்று, வெள்ளியன்று சுங்க கட்டண உயர்வை கண்டித்து,  சிஐடியு தமிழ்நாடு சாலை போக்கு வரத்து தொழிலாளர்கள் சங்கத் தினர் கோவை புறநகர் கணியூர் டோல்கேட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில், சிஐடியு கோவை மாவட்ட தலைவர் கே.மனோகரன், செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, சாலை போக்குவரத்து பொதுச்செயலாளர் ஏ.எம்.ரபீக்  உள்ளிட்ட திரளானோர் பங்கேற் றனர். நாமக்கல்  நாமக்கல் - கரூர் தேசிய நெடுஞ் சாலையில் உள்ள  கீரம்பூர் சுங்க  சாவடியில்  சனியன்று, மாநில லாரி  உரிமையாளர்கள் சம்மேளனம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், நாமக்கல் லாரி உரிமை யாளர் சங்க தலைவர்  தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்கங்களின் தலை வர்கள் செல்ல.ராஜாமணி, கே.பாலசுப்ரமணியம், ஆர் வேலுச் சாமி,  விடுதலை களம் நிறுவனத் தலைவர் கொ.நாகராஜ் உள்ளிட்ட  தலைவர்களும் கலந்து கொண் டார்கள்.