districts

img

“அபாய சூழலில் வயல் வரப்புகளில் செல்லும் பள்ளி மாணவர்கள்”

எம்.பிரபாகரன் நாமக்கல், டிச.1- பள்ளிபாளையம் பகுதியில் உரிய  சாலை வசதி இல்லாததால், நூற்றுக் கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பள்ளி செல்ல முடியாமல் தவிப்புக் குள்ளாகி வருகின்றனர். மேலும், வயல் வரப்புகளை கடந்து பள்ளிக்கு செல்லும் அபாய நிலை நிலவி வரு கிறது. நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் நகராட்சி, 10 ஆவது வார் டுக்குட்பட்ட பகுதியில் 200க்கும் மேற் பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகு திகளைச் சுற்றி உள்ள விசைத்தறித் தொழிலாளர்களின் குழந்தைகள்  ஆலாம்பாளையம் பேரூராட்சிக்குட் பட்ட அலமேடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசினர் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கல்வி பயின்று வரு கின்றனர்.  இந்நிலையில், பள்ளிபாளையம் நகராட்சி, 10 ஆவது வார்டுக்குட்பட்ட பெரும்பாறை காடு, நேரு நகர் உள் ளிட்ட பகுதிகளிலிருந்து, அரசுப்பள் ளிக்கு செல்வதற்கு உரிய சாலை வசதி இல்லை. இதனால் செடி, கொடி, முட் புதற்கள் நிறைந்த பாதை மற்றும் வயல் வரப்புகள் வழியாக மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்று வரு கின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகவே இதுவே பாதையாக உள் ளது. காலை, மாலை நேரங்களில் மாணவ, மாணவிகள் பள்ளி சென்று வரும்பொழுது, பாதையில் பாம்புகள், விஷப்பூச்சிகள், பூரான் உள்ளிட்ட ஊர்வன ஜந்துக்கள் அதிகளவு இருப்ப தால், பள்ளி செல்வதற்கு அச்சப்படு கின்றனர். சுற்றிலும் விவசாய நிலமாக இருப்பதாலும், ஆள் உயரத்திற்கு நெல் கதிர்கள் வளர்ந்து நிற்பதாலும், ஆள் அரவமற்ற பாதையாக இருப்ப தாலும் சமூக விரோதிகளின் நடமாட் டம் அதிகரித்துள்ளது.

நகராட்சி - பேரூராட்சி

விவசாய நிலத்தின் ஓரம் மது அருந் துவது, கூட்டாக சேர்ந்து கொண்டு மாணவிகளை நோட்டமிடுவது போன்ற காரணிகளால், கணிசமான அளவில் பள்ளிக்கு வருகை தரும்  மாணவ, மாணவிகள் எண்ணிக்கை யும் குறைந்து வருகிறது. இது குறித்து அப்பள்ளியில் கல்வி பயிலும்  மாணவியின் பெற்றோர் கூறுகையில், சிறு வயதில் இதே பள்ளியில் கிட்டத் தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு நாங் கள் கல்வி பயின்றோம். அப்போதும் இதேபோல தான் பாதை இருந்தது. பாதையின் பாதி தூரம் நகராட்சி வச மும், பாதி தூரம் பேரூராட்சி வசமும், நீர்வழிப்பாதை சாலையும் இருப்ப தால், முறையான சாலை அமைக்கப் படாத நிலை உள்ளது. இதுகுறித்து பள்ளிபாளையம் நகராட்சியில் தெரி வித்தாள், உரிய நடவடிக்கை எடுப் பதாக கூறுகிறார்கள். ஆனால், எவ் வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆலாம்பாளையம் பேரூராட்சி நிர்வா கத்தில் கூறினாலும், நடவடிக்கை எடுப்பதில்லை. நகராட்சி, பேரூராட் சிக்கு மையப்பகுதியில் இந்த பாதை அமைந்துள்ளதால் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காத நிலை தொடர்ந்து உள்ளது. நிதி ஒதுக்க வேண்டும் மாலை நேரத்தில் பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் மாணவிகள் இவ்வ ழியை பயன்படுத்த தயக்கம் காட்டு கின்றனர். இந்த பாதையை தவிர்த்தா லும் கிட்டத்தட்ட இரண்டு முதல்  மூன்று கிலோமீட்டர் சுற்றிக்கொண்டு தான் பள்ளிக்கு செல்ல வேண்டிய  நிலை உள்ளது.  பெரும்பாலான பெற் றோர் இந்த சாலையில் ஆபத்தான முறையில் செல்வதை தவிர்க்கும் வகையில், இப்பள்ளியில் மாணவ, மாணவியரை சேர்ப்பதையே நிறுத் திக் கொண்டனர். .இதன் காரணமாக வும், கணிசமான அளவில் அரசுப்  பள்ளியில் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து மாணவ, மாணவியர் அச்சமின்றி சென்று வரும் வகையில், சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்தோ அல் லது நாடாளுமன்ற உறுப்பினர் நிதியி லிருந்தோ நிதி ஒதுக்கீடு செய்து, முறையான சாலை வசதி ஏற்படுத் தித்தர வேண்டும். இதுதொடர்பாக திங்களன்று (இன்று) ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளோம், என்றனர். அரசுப்பள்ளியில் மாணவ, மாண விகள் நன்றாக கல்வி பயில வேண்டு மென தமிழக அரசு பல்வேறு முயற்சி களை எடுத்து வருகிறது. காலை உணவு திட்டம், விலையில்லா மிதி வண்டி, மடிக்கணினி, கல்வி உதவித் தொகை, டிஜிட்டல் முறை கல்வி என அரசுப்பள்ளிகளை தமிழக அரசும், கல்வித்துறையும் ஊக்குவித்து வரு கிறது. ஆனால், பொதுப்பாதை முறை யாக இல்லாததால் அரசுப்பள்ளிக்கு வருகை தரும் மாணவ மாணவர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவது சமூக ஆர்வலர்கள் மத்தி யில் வேதனையை ஏற்படுத்தியுள் ளது.