கோவையில் ஒரு வருடம் கழித்து ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி மீண்டும் துவங்கியது. ஆர்.எஸ்.புரம் டி.பி சாலையில் ஞாயிறன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியினை, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாடல்களுக்கு நடனமாடி மகிழ்ந்தனர்.