districts

img

புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்

அவிநாசி, டிச. 31- அவிநாசியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் சங்கத்தின் சார்பில் புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அவிநாசி ஒன்றிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம் நிகழ்ச்சியை செவ்வா யன்று நடத்தினர். முன்னதாக மூத்த ஆசிரியர் சாமி நாதன் மறைவையொட்டி அவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அரசு போட்டித் தேர்வில் மாநில முதலிடம் பெற்ற மாணவி வ.சுபாஷினிக்கு பரி சளித்து, பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து சுளுந்தீ சமூகத்தின் பண்பாட்டு ஆவணம் தலைப்பில் கோவை எழுத்தாளர் சதாசிவம், நீர் எழுத்துக்கள் தமிழகத்தின் தண்ணீர் ஆவணத்தின் ஆசிரியர் மணிகண்டன் பிரபு ஆகியோர் உரை யாற்றினர்.

;